Skip to main content

Posts

Showing posts from December, 2024

ஜார் ஒழிக - சாம்ராஜ், வாசிப்பனுபவம்

     ஜார் ஒழிக, கவிஞர் சாம்ராஜின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. நீண்ட விடுமுறை தினங்களான இந்த நாட்களில் ஆண்டு தொடக்கத்தில் படிப்பதற்காக எடுத்து வைத்து முடிக்காமல் விட்ட புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். மாலை தொடங்கி ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் ஜார் ஒழிக.      முதன் முதலாக இரண்டாம் நிலை ஆலயக்கலை வகுப்பில் பங்கேற்று கவிஞரை சந்தித்து வீடு திரும்பிய ரயில் பயணத்தில் ஜார் ஒழிக என்ற ஒரு கதையை மட்டும் படித்துவிட்டு அப்படியே வைத்திருந்தேன்.       சுஜாதாவை தன் ஆதர்சங்களில் ஒருவராக சாம்ராஜ் குறிப்பிட்டுள்ளார், எந்த ஒரு கதையும் சுவாரஸ்ய தன்மை குன்றாமல் வரிகளுக்கிடையில் பகடியை விட்டு செல்கின்றன. வாசகனாகிய எனக்கு இட்டு நிரப்ப சில இடைவெளிகளை தந்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் வருபவர்கள் நாம் அன்றாடம் காணும் மனிதர்கள் - குள்ளன் பினுவையோ, பரமேஸ்வரியையோ காலை பேருந்து நிறுத்தத்தில் நாம் பார்த்திருக்கக்கூடும்.      மரியபுஷ்பம் இல்லம் கதை மற்ற அனைத்து கதைகளை விடவும் மனதிற்கு நெருக்கமான ஒன்று, என் நிலத்தில் நடக்கும் கதை, மாம்பழ சால...

இந்திர நீலம் முழுமை

    இன்று இந்திர நீலம் படித்து முடித்தேன். துவாரகையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். முதற்கனல் தொடங்கி பிரயாகை வரையிலான நாவல்களை காட்டிலும் வெண்முகில் நகரம் எனக்கு மிகுந்த நெருக்கமான ஒரு பகுதி. இந்த குருபூர்ணிமா நாளன்று நித்தியவனத்தில் நடைபெற்ற கேள்வி பதில் போட்டியில் பீமனுக்கு எப்போது துரியோதனன் மீது வன்மம் பிறக்கும் என்ற கேள்விக்கு பதில் சொல்லியதற்காக பரிசாக கையெழுத்திட்டு ஜெயமோகன் அவர்கள் அளித்த நூல். முழு வீச்சாக இந்திர பிரஸ்தத்தின் ஆயுத்த பணிகளை படித்து முடித்தேன். நன்றி - முகநூல் Chitrayog Art Boutique           வெண்முகில் நகரம் முடித்த அதே நாளில் இந்திர நீலத்தை தொடங்கினேன். எட்டு திருமகள்களும் கிளம்பி சென்ற இடமான விண்ணளந்தோனின் வலமார்பினை அடையும் கதை இந்திர நீலம். நீலத்தில் வரும் கிருஷ்ணன் மாயன், பொற்பாதங்கள் நிலத்தை தொடாது பறந்தும் பின் சில சமயம் நடந்தும் மாயம் காட்டுபவன், இந்திர நீலத்தில் அவன் பேரரசன், அரசியல் மதியூகி, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பும் பெரு வீரன். ஒவ்வொரு இளவரசியின் திருமணமும் இந்த பெரும் பகடையாட்டத்தின் காய் நகர்த...