Skip to main content

Posts

A celestial wedding ✨🧿❤️

Recent posts

ஒரு குட்டி வாழ்க்கை ✨

ஒரு குட்டி வாழ்க்கை கன்னிமாரா நூலகம் கன்னிமாரா நூலகம் செல்லவும் ராஜாவின் simphony கச்சேரிக்குமாக சென்ற வெள்ளி இரவு நண்பர்களுடன் மெட்ராஸ் சென்றுவந்தோம். சென்னை குறித்த எனது முதல் நினைவென்பது AIPMT (All India Pre Medical Test)தேர்வுக்காக 2015ம் ஆண்டு அப்பாவுடன் அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா வந்தது தான். இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால் அகில இந்திய அளவில் மருத்துவக்கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ இடம் கிடைக்கும் என்று செய்தித்தாள்களில் படித்து அதற்காக வந்திருந்தோம். அப்போது பலருக்கும் இருப்பதை போன்று ஒரு பிரமிப்புணர்வு தான் இருந்தது. பின்பு பல முறை மாமா வீட்டிற்கும் உணர்வினர் வீட்டிற்கும் கடந்த சில ஆண்டுகளாக புத்தக கண்காட்சிக்கும் என சென்னை பழக்கப்பட்ட நகரமாகிவிட்டது.  சென்னை எனக்கு எப்போதுமே தொன்மையின் நகரம். Robert Bruce Foot பல்லவரத்திற்கு அருகில் பழங்கற்காலத்தை சேர்ந்த கல் கருவிகளை கண்டுபிடித்தார். கற்காலத்திலிருந்து காலனியாதிக்க காலகட்டம் வரை மெட்ராஸ்ற்கு ஒரு அறுபடாத வரலாற்று தொடர்ச்சி இருக்கிறது. சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் மயிலாப்பூரின் வாயிலர் ந...

ஜனநாயக சோதனை சாலையில் - நூல்குறிப்பு

சென்ற சனிகிழமையன்று திருவாரூர் செல்ல திட்டமிட்டிருந்தோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் “பரபரப்பான” சூழலில் இருந்து விடுபடவும், தகவல் என்ற பெயரில் நொடிக்கொரு செய்தியை “தயாரித்து” பதட்டத்தில் வைத்திருந்த  செய்தி ஊடகங்களில் இருந்து மீட்பும் அளித்த பயணம்.  காலை ஜெ தளத்தில் ஜனநாயக சோதனை சாலையில் புத்தகத்தை குறித்த கட்டுரை எழுதியிருந்தார். கிண்டிலில் வாங்கி படிக்க தொடங்கினேன். 2016ம் ஆண்டுவாக்கில் தினமலரில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதுவரை அரசியல் என்று புரிந்துவைத்திருந்த ஏறத்தாழ அத்தனையும் தவறான புரிதல்கள் என்று புத்தகத்தை படித்து முடிக்கும்போது தோன்றியது.  வெளிச்சத்தின் பின்னணியில் கரிய x Ray அர்த்தப்படுவதை போல, ஒரு சமகால அரசியல் நிகழ்வு வரலாற்று, தத்துவ பின் புலத்தில் புதிய அர்த்தத்தை கொடுக்கிறது. முதலில் இந்நூல் அன்றாட தேர்தல் அரசியலில் இருந்து வாக்களிக்கும் ஒருவனுக்கு இந்த ஜனநாய முறைக்கு நாம் வந்தடைந்த வரலாற்று பின்னணியை விளக்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் மலைமுடியை மட்டுமே தொட்டு சிறிய சிந்தனை துளியை மட்டும் சொல்லி செல்வதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும்...

மரக்கட்டை மாமியார் முதலிய கதைகள் - லால்குடி தினேஷ்

மரக்கட்டை மாமியார் முதலிய கதைகள் நண்பர் லால்குடி தினேஷ் எழுதிய ஆய்வாளர்  அ.கா. பெருமாள் அவர்களின் " மரக்கடை மாமியார் முதலிய கதைகள்" நூலின் மதிப்புரை.  தமிழில் செவ்வியல் இலக்கியம் எந்த அளவு உள்ளதோ அதே அளவிற்கு நாட்டார் இலக்கியமும் உள்ளது. சுவடிகளில் மறைந்து கிடந்த செவ்விலக்கியத்தை தேடிக் கண்டடைந்து பதிப்பிக்கப்பட்டு அதன் மறுமலர்ச்சி உருவான காலத்திற்கு சற்று பிந்தி நாட்டார் இலக்கியமும் அதிக அளவில் பதிப்பிக்க படுகிறது. அதில் முதலில் நாட்டார் மரபில் வாய்மொழியாக பல வடிவங்களில் உலவும் கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டார் ஆய்வுகள் என நீளும் மரபில் இப்போது இருக்கும் பெரும் ஆளுமை அ.கா.பெருமாள் அவர்கள். அவர் தொகுத்த 29 கதைகள் அடங்கிய நூல் இது. இதை பரிசல் புத்தக நிலையம் 2024-ம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை அ. கா .பெருமாள் அவர்களுக்கு தோல் பாவை கூத்து கலைஞர்கள் சுப்பையா ராவ் மற்றும் பரமசிவராவ் கூறியுள்ளனர். அ. கா .பெருமாள் இந்த இரு கலைஞர்களுடனும் நெருங்கி பழகி அவர்களோடு கூத்து நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றுள்ளார...

திருவாரூர் ஆழித்தேர் - குருகு கட்டுரை

குருகு 26வது இதழில் திருவாரூர் தேர் குறித்த எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது.  திருவாரூர் ஆழித்தேர் தமிழகத்தின் நீண்ட திருவிழாக்களில் தலையாயது. வசந்த விழாவிற்கு முன்னும் பின்னுமாக 55 நாட்கள் நடைபெறும் நீண்ட பிரம்மோற்சவம். எழுத்து வடிவில் கிடைக்கும் ஆவணங்களாகவே தஞ்சை சரஸ்வதி மகால் நூலத்தில் உள்ள மோடி ஆவணங்களில் திருவாரூர் தேர் திருவிழா குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. தேவாசிரியன் மண்டப விதான ஓவியங்களிலும் திருவிழா ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.  நண்பர்களுடன் சென்று வந்த அனுபவக் குறிப்புகளும் திருவிழா பத்ததி குறித்தும் தேருக்கு முதல் நாள் புறப்பாடு குறித்தும் ஆவணப் படுத்த முயற்சித்துள்ளேன். இவற்றை இன்னும் நீண்ட பதிவாக ஒவ்வொருநாளும் நடைபெறும் நிகழ்வுகளை புகைப்படங்களுடன் தொகுக்கும் திட்டமும் உள்ளது. அரசன் என்ற தொல்படிமம் அதன் உட்சபட்ச சாதியத்தை எவ்வாறு  அடைகிறது என்று புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். கட்டுரையை படித்து செழுமை செய்ய உதவிய நண்பர் லால்குடி தினேஷ் மற்றும் புதுவை தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு நன்றியும் அன்பும்.  இந்த இதழில் பண்டைய இசைக்கருவிகளை ஆவணப் படுத்தும் சரவண ப...