அருமணிகளும் அணியாரமும் தீவிர வாசிப்பும் பயணமும் தொடங்கியதில் இருந்து கொண்டிருக்கும் உறுதி வார இறுதி நாட்களை ஒருபோதும் ஒழுகிச்செல்ல விட கூடாது என்பது. திரிபுவனம் கம்பஹரேஸ்வரர் ஆலயம் அதற்காகவே வெள்ளி இரவே கொஞ்சம் இழுத்து பிடித்து வேலை எல்லாவற்றையும் முடித்து விடுகிறேன். 5 நாட்களை சாமிக்கு விட்டு விட்டு இரண்டு நாட்கள் மட்டும் தான் நாம் எடுத்துகொள்கிறோம். பயண திட்டம் இல்லாத நாட்களில் கூட முரளி காப்பிக்காகவாவது சீக்கிரம் எழுந்துவிடுவேன். "இது ஒரு வினோத பிறவி வார நாள்ல தான் சீக்கிரம் எந்திரிப்பாங்க இது லீவு நாள்ல rest எடுக்காம சீக்கிரம் எந்திரிக்கும்" என்று அம்மா வைதுகொண்டிருப்பாள். 5.30 மணி தாம்பரம் ரயிலை பிடிப்பதாக திட்டம். திருவானைக்கோவிலில் இருந்து சத்திரம் வரையில் ஆட்டோ, அதன் பின் பேருந்து, திருச்சி முதல் கும்பகோணம் ரயில், கும்பகோணத்தில் இருந்து திருவிசநல்லூர்(திருவிசலூர்) வரை சிற்றுந்து திருவிசநல்லூர் இருந்து கைகாட்டி வரை லிஃப்ட் அதன் பின் 1 கிலோமீட்டர் நடை என்று பயணம் செய்து திருவிசநல்லூர் சிவயோகநாதர் கோயிலுக்கு வந்து சேர்ந்தேன். இ ரவு பெய்த கன மழையால் எங்கும் ...