Skip to main content

Posts

தித்திக்கும் தற்செயல்கள் ❤️

Recent posts

மூத்தோளின் கதை 🖤

  மூத்தோளின் கதை  முற்கால சோழர் கோயில்கள் பலவற்றிலும் பிரம்மாண்டமான சிற்பமாக பல நுணுக்கங்களுடன் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி சிலை இன்று ஏன் கைவிடப்பட்டு கிடக்கிறது என்பதற்கான பதிலை கொடுத்த நூல் வரலாற்றில் ஜேஸ்டாதேவி மூதேவி வழிபாடு. சில நூல்கள் வாங்கிய அன்றே படிக்க தொடங்குவதும் பல நூல்கள் சில ஆண்டுகள் கழித்து கண்ணுக்கு படுவதும் எப்போதும் நிகழ்வது. சென்ற ஆண்டு தமிழ் விக்கி தூரன் விருது அறிவிக்கப்பட்ட உடன் முதலில் வேதாசலம் அவர்களிடம் வாங்கியது இந்த புத்தகம் தான். விழா நாள் அன்று வாழ்த்துக்கள் வெ.வேதாசலம் என்று கையெழுத்திட்டு கொடுத்த புத்தகம் அலமாரியில் நடுவரிசையில் கம்மென்று அமர்ந்திருந்தது. இப்போது கிராதம் படித்துகொண்டிருப்பதால் இதோடு இணைத்து படிக்கலாம் என்று படித்து முடித்தேன்.  உலகின் பழங்குடிகள் பலவற்றிலும் உள்ள பொதுப்பண்பான தாய்தெய்வ வழிபாட்டில் அன்னையான மூத்தோள் அமங்கலத்தின் தெய்வமாக மாறிய வரலாற்றை கூறும் நூல் தமிழ் விக்கி விருது பெற்ற தமிழகத்தின் முக்கியமான ஆய்வாளரும் தொல்லியல் அறிஞருமான வேதாசலம், வே.திருநங்கை  அவர்களின் வரலாற்றில் மூதேவி வழிபாடு. வேதாசலம் அவரது பாண...

அருமணிகளும் அணியாரமும் 💎 ❤️

அருமணிகளும் அணியாரமும் தீவிர வாசிப்பும் பயணமும் தொடங்கியதில் இருந்து கொண்டிருக்கும் உறுதி வார இறுதி நாட்களை ஒருபோதும் ஒழுகிச்செல்ல விட கூடாது என்பது. திரிபுவனம் கம்பஹரேஸ்வரர் ஆலயம்  அதற்காகவே வெள்ளி இரவே கொஞ்சம் இழுத்து பிடித்து வேலை எல்லாவற்றையும் முடித்து விடுகிறேன். 5 நாட்களை சாமிக்கு விட்டு விட்டு இரண்டு நாட்கள் மட்டும் தான் நாம் எடுத்துகொள்கிறோம். பயண திட்டம் இல்லாத நாட்களில் கூட முரளி காப்பிக்காகவாவது சீக்கிரம் எழுந்துவிடுவேன். "இது ஒரு வினோத பிறவி வார நாள்ல தான் சீக்கிரம் எந்திரிப்பாங்க இது லீவு நாள்ல rest எடுக்காம சீக்கிரம் எந்திரிக்கும்" என்று அம்மா வைதுகொண்டிருப்பாள்.   5.30 மணி தாம்பரம் ரயிலை பிடிப்பதாக திட்டம். திருவானைக்கோவிலில் இருந்து சத்திரம் வரையில் ஆட்டோ, அதன் பின் பேருந்து, திருச்சி முதல் கும்பகோணம் ரயில், கும்பகோணத்தில் இருந்து திருவிசநல்லூர்(திருவிசலூர்) வரை சிற்றுந்து திருவிசநல்லூர் இருந்து கைகாட்டி வரை லிஃப்ட் அதன் பின் 1 கிலோமீட்டர் நடை என்று பயணம் செய்து திருவிசநல்லூர் சிவயோகநாதர் கோயிலுக்கு வந்து சேர்ந்தேன்.  இ ரவு பெய்த கன மழையால் எங்கும் ...