திருமயிலை கபாலீஸ்வரம். புத்தக விழா முடித்து மறுநாள் காலை சென்னையை சுற்றி பார்க்க கடற்கரை ரயில் ஏறினேன். என்னை போன்ற சென்னை வாசி அல்லாத ஒருவனுக்கு இந்நகரம் ஒரு வரலாற்றின் பேரகராதி. கற்கால மனித நாகரீகத்திலிருந்து வெள்ளையர் ஆட்சி காலம் வரைக்கும் அறுபடாத அத்தியாயங்களை கொண்ட புத்தகம் . ஒவ்வொரு தெருக்களிலும் கட்டிடங்களிலும் வரலாற்று எச்சங்களை இந்நகரம் கொண்டிருக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து அலைந்து திரிந்தாலும் பார்த்து முடிக்க முடியாத அத்தனை வரலாற்று பண்பாட்டு தலங்கள் இந்நகரத்தில் உள்ளன. அரைநாளுக்குள் இல்லம் திரும்புவதால் கபாலீஸ்வரத்திற்கு மட்டும் சென்று வர திட்டம். குளக்கரையில் இறக்கிவிட்ட ராபிடோ நண்பர் இது தான் ராஜகோபுரம் என்று சொல்லிவிட்டு சென்றார். தேவதேவனின் கவிதை ஒன்று மார்கழி மாதம் – வேறென்ன வேண்டும்? உயிரின் உயிரைத் தீண்டுகிறது குளிர். கோலங்களில் வந்தமர்கிறது மலர். கொடியதொரு காலம். உயிரை ஜில்லிட வைத்து மரக்கச் செய்கிறது ஆரம்பத் திகில். அலங்கோலமெங்கும் தெறிக்கும் குருதி அ...