Skip to main content

இந்திய பயணம் நூல் வாசிப்பனுபவம் 🤍

இந்திய பயணம் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்கள் 2008ம் ஆண்டு ஈரோட்டிலிருந்து காசி வரைக்கும் செய்த பயணத்தின் பயணக்கட்டுரை நூல்.



வரலாறு மற்றும் இலக்கியத்திற்கு இணையாகவே பயணக்கட்டுரைகளும் சுவாரசியமானவை. ஒவ்வொரு கட்டுரைக்கும் முற்றிலும் புதிதாக நிகழும் காட்சிகள், மனிதர்கள், உணவு, கால நிலை, மொழி என்று ஒவ்வொரு மின்னல் வெட்டாக வந்து போகும் பின்புலங்கள். அத்தனை மின்னல் வெட்டுகளுக்கும் பொதுப்பண்பாக ஒளி கீற்று ஒன்றிருப்பது போன்று தோன்றும்.

முன்பு சிட்டி, தி ஜா வின் நடந்தாய் வழி காவேரி கட்டுரை, ஏ கே செட்டியாரின் பயணக்கட்டுரைகள், தொ.மு பாஸ்கர தொண்டைமானின் வேங்கடம் முதல் குமரி வரை நூலின் சில கட்டுரைகள், சமீபத்தில் S ராமகிருஷ்ணனின் தேசாந்திரி போன்ற பயணக்கட்டுரைகளை படித்திருக்கிறேன்.

இந்திய பயணம் நூல் 20 நாட்களுக்குள் சில நகரங்களை மட்டும் கண்டு செல்லும் சிறிய பயணம் குறித்த அனுபவங்கள், அவதானிப்புகள் அடங்கிய தொகுப்பு. பயணக்கட்டுரைகளில் காட்சி அனுபவங்கள் மட்டும் அன்றி இடை இடையில் வரும் இலக்கிய வரிகளுக்காக வாசிக்கலாம், அந்த நிலக்காட்சி, மனிதர்கள், மொழி, போன்ற பருவடிவங்கள் ஆழ் மனதில் பதிந்து அப்போது பூக்கும் பூவாக சில வரிகள் எழும். அவை முக்கியம். உதாரணமாக 

"இருள் பிரியா நேரத்தில் ஒரு ஊரை விட்டு விளங்குவதில் கவித்துவமாக ஏதோ ஒன்று உள்ளது" என்ற வரி வெண்முரசில் ஒரு அத்தியாயத்தில் வைக்க தக்கது.

மேலும் தாரமங்கலம் கட்டுரையில் "ஊர் திரும்பும்போது அனேகமாக ஆழமான அமைதி நிலவும், அந்த அமைதி தான் நாம் பயணங்களில் ஈட்டுவது".

"நாயை கண்டு மரத்தில் ஏறிக்கொள்வது போலத்தான் அக்கால ஆட்சியாளர்கள் குன்றுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்"

"மண்ணுக்கு ஆத்மா போல ஓடும் இப்பெருநதிகள் அன்றி கண்முன் தெரியும் தெய்வங்கள் பிறிதில்லை என்று உணர்ந்திருந்தார்கள் முன்னோர்"

இந்த கட்டுரைகள் அனைத்து அன்றன்றைக்கே எழுதி வலைதளத்தில் பதிவேற்றப்பட்டவை, ஆகவே அளவில் சிறிய கட்டுரைகள். சுடச்சுட வாசிக்க கிடைத்தவை என்றும் சொல்லலாம்.

இந்த பயணத்தில் கோயில்கள் முக்கிய நிறுத்தங்களாக அமைந்துள்ளன. சில கோயில்களை விவரிக்கும்போது, அவற்றை குறித்த வரலாற்று பின்புலமும் விவரிக்கப்பட்டுள்ளது. லெபாக்ஷி கோயில் வரும் கட்டுரையில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தை, மாலிக் கஃபூர் படையெடுப்பிற்கு பின் வித்யாரண்யர் சுவாமிகள் ஹரிஹரர், புக்கர் இருவரையும் மீண்டும் மதம் மாற்றி விஜயநகரம் என்னும் பேரரசு தொடங்கப்பட்ட வரலாற்றை விவரித்துள்ளார்.

ஒரு பேரரசு கண் முன் எழுந்து வரும் சித்திரத்தை அளிக்கும் அதே கட்டுரையில் சிவா ஒரு ஆலமரத்தில் ஆடியதையும் விவரித்துள்ளார். இந்த இருமை வாசிப்பை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. கவிஞர் கல்பற்றா நாராயணனும் ஒரு சக பயணி என்பதால் போற போக்கில் சொல்லும் சில கவிதைக்கு இணையான அல்லது கவிதை வரிகள் குறிக்கப்பட்டுள்ளன. 

பயணக்கட்டுரைகளில் பல, சமயங்களில் நமது பயண அனுபவங்களை தொட்டெடுக்கும். காகதீய பேரரசின் நல்கொண்டா விமானங்களை அடுக்கடுக்கான சாளுக்கிய பாம்சன  விமானங்களுடன் பொருத்திப்பார்க்க முடிந்தது.

ஈரோட்டில் தொடங்கிய பயணத்தை, தாரமங்கலம், லெபாக்ஷி, பெனுகொண்டா, நல்கொண்டா, வாரங்கல், தர்மபுரியில்,சாஞ்சி,காசி என்று முக்கிய நகரங்கள் அனைத்தையும் தொட்டு சென்றுள்ளனர்.

சாஞ்சி ஸ்தூபியை குறித்த கட்டுரை மற்ற கட்டுரைகளை காட்டிலும் மிக நெருக்கமான ஒன்று. நல்லதொரு வாசிப்பனுபவத்தை கொடுத்த முக்கியமான நூல்.


Comments

Post a Comment

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...