Skip to main content

யானை டாக்டர் புத்தக விமர்சனம்

 


ஒவ்வொரு புத்தகமும் ஒரு பயணம் என்பர். இன்று நாம் போகவிருக்கும் பயணம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் முதுமலை பகுதியின் டாப் ஸ்லிப்பில் உள்ள யானைகள் காப்பகத்திற்கு. சமகால கதை சொல்லிகளில் மிக முக்கியமான இடத்தில் உள்ள திரு பவா செல்லதுரை அவர்கள் தான் யானை டாக்டர் புத்தகத்தை  எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர்.

               டாக்டர் K எனப்படும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை குறித்த ஒரு ஆவணப் படத்தை புனைவு கலந்து  எழுதியிருக்கிறார் ஜெயமோகன் அவர்கள். IFS முடித்த ஒரு அலுவலர் டாக்டர் கே அவர்களுக்கு ஒரு பத்ம ஸ்ரீ விருது வாங்கித்தர வேண்டும் என்று முனைந்து தன்னால் இயன்ற வரையில் முயன்று கொண்டிருக்கிறார். காட்டில் வளர்ந்து கட்டின் ஒவ்வொரு பாதையும் தன் நரம்பென கொண்ட டாக்டர் K வெறும் சுழல் குழலில் பெறப்படும் பட்டமும் பதக்கமும் இந்த அறிவொளி பொருந்திய குழந்தைகளின் அன்பிற்கு முன் தூசெனும் சமம் ஆகாது என்று அவரை உணரச் செய்கிறார் என்பதே கதை சுருக்கம். முன்பு ஒருமுறை தனக்கு சிகிச்சை செய்த ஓர் மனிதனின் வாசனயை நினைவிற்கொண்டு அறுபது கிலோமீட்டர்கள் நடந்தே வந்து தன் குழுவில் உள்ள ஒரு குட்டிக்கு சிகிச்சை செய்ய சொல்லி முறையிடும் காட்சி நம்மை மிரட்சி கொள்ளச் செய்யும் கதையின் உச்சம். செல்வாவை டாக்டர் அறிமுகம் செய்யும் தருணமும் செந்நாய்க்கு மருத்துவர் சிகிச்சை செய்யும் காட்சியும் காட்டை பற்றிய அவரின் புரிதலை விவரிக்கும் இடங்கள்.

               என்றோ ஒருநாள் டாக்டர் அழுகிய யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்த காட்சியை கண்ட பின் அவர் அதே கைகளால் வழங்கும் தேனீரை குடிக்க தயங்குகிறான் என சாமானியன் காட்டிலிருந்து எப்படி அந்நியப்பட்டிருக்கிறான் என்ற இடத்தில் தொடங்கும் கதை. அவனது உடம்பிற்குள் அவனே அறியாமல் காட்டின் குருதியை மெல்ல மெல்ல செலுத்துகிறார் டாக்டர் K. பத்ம விருதிற்க்கு உதவுவதாய் கூறிய நண்பன் தோல்வி அடைந்து ஏமாற்றிய அமைச்சரை அந்த கிழநரி என்னை ஏமாற்றிவிட்டது என்று கூறும் போது இடை மறித்து "எந்த நரியும் அவ்வாறு தந்திரம் செய்யாது" என்று கூறி தொலைபேசியை துண்டிப்பதாய் கதை முடிவை எட்டுகிறது.

               சொல்வேந்திரன் அவர்களின் வசிப்பது எப்படி என்ற புத்தகத்தில் யானை டாக்டர் புத்தகத்தை பற்றி இவ்வாறு எழுதுகிறார். - "ஜெயமோகனின் யானை டாக்டர் புத்தகத்தை படித்த ஒருவன் ஒரு போதும் வனபகுதியில் கண்ணாடி புட்டில்கலை மறந்தும் கூட வீசி எறியமாட்டான். 

காட்டை பற்றியும் யானையை பற்றியும் மற்றுமொரு பரிமாணத்தை வாசிப்பவர் எய்துவார். அனைவரும் வசிக்கவேண்டிய நூல் யானை டாக்டர். ஜெயமோகன் அவர்களது இணைய தளத்தில் மின்னூல் ஆகவும் வெளியிட்டிருக்கிறார்.

https://www.jeyamohan.in/12433/

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...