Skip to main content

யானை டாக்டர் புத்தக விமர்சனம்

 


ஒவ்வொரு புத்தகமும் ஒரு பயணம் என்பர். இன்று நாம் போகவிருக்கும் பயணம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் முதுமலை பகுதியின் டாப் ஸ்லிப்பில் உள்ள யானைகள் காப்பகத்திற்கு. சமகால கதை சொல்லிகளில் மிக முக்கியமான இடத்தில் உள்ள திரு பவா செல்லதுரை அவர்கள் தான் யானை டாக்டர் புத்தகத்தை  எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர்.

               டாக்டர் K எனப்படும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை குறித்த ஒரு ஆவணப் படத்தை புனைவு கலந்து  எழுதியிருக்கிறார் ஜெயமோகன் அவர்கள். IFS முடித்த ஒரு அலுவலர் டாக்டர் கே அவர்களுக்கு ஒரு பத்ம ஸ்ரீ விருது வாங்கித்தர வேண்டும் என்று முனைந்து தன்னால் இயன்ற வரையில் முயன்று கொண்டிருக்கிறார். காட்டில் வளர்ந்து கட்டின் ஒவ்வொரு பாதையும் தன் நரம்பென கொண்ட டாக்டர் K வெறும் சுழல் குழலில் பெறப்படும் பட்டமும் பதக்கமும் இந்த அறிவொளி பொருந்திய குழந்தைகளின் அன்பிற்கு முன் தூசெனும் சமம் ஆகாது என்று அவரை உணரச் செய்கிறார் என்பதே கதை சுருக்கம். முன்பு ஒருமுறை தனக்கு சிகிச்சை செய்த ஓர் மனிதனின் வாசனயை நினைவிற்கொண்டு அறுபது கிலோமீட்டர்கள் நடந்தே வந்து தன் குழுவில் உள்ள ஒரு குட்டிக்கு சிகிச்சை செய்ய சொல்லி முறையிடும் காட்சி நம்மை மிரட்சி கொள்ளச் செய்யும் கதையின் உச்சம். செல்வாவை டாக்டர் அறிமுகம் செய்யும் தருணமும் செந்நாய்க்கு மருத்துவர் சிகிச்சை செய்யும் காட்சியும் காட்டை பற்றிய அவரின் புரிதலை விவரிக்கும் இடங்கள்.

               என்றோ ஒருநாள் டாக்டர் அழுகிய யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்த காட்சியை கண்ட பின் அவர் அதே கைகளால் வழங்கும் தேனீரை குடிக்க தயங்குகிறான் என சாமானியன் காட்டிலிருந்து எப்படி அந்நியப்பட்டிருக்கிறான் என்ற இடத்தில் தொடங்கும் கதை. அவனது உடம்பிற்குள் அவனே அறியாமல் காட்டின் குருதியை மெல்ல மெல்ல செலுத்துகிறார் டாக்டர் K. பத்ம விருதிற்க்கு உதவுவதாய் கூறிய நண்பன் தோல்வி அடைந்து ஏமாற்றிய அமைச்சரை அந்த கிழநரி என்னை ஏமாற்றிவிட்டது என்று கூறும் போது இடை மறித்து "எந்த நரியும் அவ்வாறு தந்திரம் செய்யாது" என்று கூறி தொலைபேசியை துண்டிப்பதாய் கதை முடிவை எட்டுகிறது.

               சொல்வேந்திரன் அவர்களின் வசிப்பது எப்படி என்ற புத்தகத்தில் யானை டாக்டர் புத்தகத்தை பற்றி இவ்வாறு எழுதுகிறார். - "ஜெயமோகனின் யானை டாக்டர் புத்தகத்தை படித்த ஒருவன் ஒரு போதும் வனபகுதியில் கண்ணாடி புட்டில்கலை மறந்தும் கூட வீசி எறியமாட்டான். 

காட்டை பற்றியும் யானையை பற்றியும் மற்றுமொரு பரிமாணத்தை வாசிப்பவர் எய்துவார். அனைவரும் வசிக்கவேண்டிய நூல் யானை டாக்டர். ஜெயமோகன் அவர்களது இணைய தளத்தில் மின்னூல் ஆகவும் வெளியிட்டிருக்கிறார்.

https://www.jeyamohan.in/12433/

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...