Skip to main content

ராணி மங்கம்மாள் - நா பார்த்தசாரதி

 


 

    நா பார்த்தசாரதியின் சரித்திர நாவல்களுள் மிக முக்கியமான குறு நாவல் ராணி மங்கம்மாள். வடக்கில் ஜான்சி ராணி பிறப்பதற்கு மூந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு வீரப் பெண்மணி. நாயக்க வம்சத்து மன்னரான சொக்கநாத நாயக்கரின் ராணி மங்கம்மாளின் கணவர். சொக்கநாத நாயக்கர், திருமலை நாயக்கரின் பேரன்.

    கணவன் சொக்கநாதன் இறப்பிற்கு பின் உடன் கட்டை ஏறாது தன் மகன் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கனை வளர்த்து ஆளாக்கி அரியணையில் அமர வைத்தார். (ராஜ மௌலி இவரது கதையை படித்திருக்க கூடும்). முது வீரப்ப நாயக்கரின் இறப்பிற்கு பின் அவரது மகன் குழந்தை விஜயரங்க சொக்கநாதன் பிறந்த உடன் அவனது தாய் தந்தை இருவரும் மறித்து விடவே குழந்தைக்கு மகுடம் சூற்றி ஏறத்தாழ 18 ஆண்டுகள் மங்கம்மாளே ஆண்டு வந்தார்.

    புத்தகத்தின் சுவாரசிய தகவல்களுள் ஒன்று கன்னட அரசன் சிக்கதேவரயனின் மீது முத்து வீரப்பனின் படை எடுப்பு முயற்சி. தமிழகத்திற்கும் கன்னடதிற்குமான காவிரி விவகாரம் அறுநூறு- எழுநூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒன்று. சிக்கதேவராயர் காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து விட்டிருந்தார். உழவர்குடி மக்கள் முறையிட தஞ்சை படைகளின் கூட்டு முயற்சியோடு ஒரு படை எடுப்பிற்கு ஆயுத்தம் செய்தார் ராணி மங்கம்மாள். எனினும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை அணை உடைபுற்று நீர் தஞ்சை கடைமடை வந்தடையவே, படையெடுப்பு கைவிடப் பட்டது. (அப்போதும் இயற்கை தான் உதவியதே அன்றி ஆட்சியாளர்கள் அல்லர்)

     தெற்கே மறவர் சீமையின் மீது போர் தொடுத்து தோல்வி அடைந்தது, தஞ்சை ஷாஜி அரசை வெற்றி கொண்டது , திருவிதாங்கூர் அரசின் மீது படையெடுப்பு போன்ற போர் செய்திகளும் ஆசிரியர் விவரித்துள்ளார். 

    ராணி மங்கம்மாள் திரிசிரபுரம் கோட்டை மற்றும் மதுரை தமுக்கம் கோட்டையிலும் மாறி மாறி வசித்துள்ளார். ஆகவே இரண்டு நிலப் பரப்புகளும் புத்தகம் முழுவதும் விவரிக்கப் பட்டுள்ளன. ராணி மங்கம்மாள் மத நல்லிணக்கத்தை பேணி காத்த வெகு சில அரசுகளுள் ஒருவர் என்பதை அறிய முடிகிறது. தற்போது ராணி மங்கம்மாளின் கொலு மண்டபம் மலைகோட்டை அருகில் அரசு அருங்காட்சியகமாக செயல் பட்டு வருகிறது. இந்த மண்ணையும் மக்களையும் வளர்த்த அரசர்களின் வரலாறு என்பது நம் தாய் தந்தையரின் வரலாற்றை போன்றது. அத்தகைய வரலாற்றை படித்து அனைவரும் இன்புறுவோமாக.

திருமகள் நிலையம் பதிப்பகம், 250 பக்கங்களை உடைய புத்தகம்.

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...