Skip to main content

மறைக்கப் பட்ட இந்தியா - S. Ramakrishnan

    வரலாற்றின் மீது எப்போதுமே எனக்கு தீராத ஆர்வம் உண்டு. நாளைய கேள்வியின் பதிலை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு நேற்று தான் வரலாறு. ஒருமுறை S.Ra அவர்கள் அமரிக்காவில் மிகத் தொன்மையான பொருள் என்றால் அதற்கு 500 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். அனால் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு மரக்காபடி பத்து தலைமுறையாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு பொருள் என்று கூறியுள்ளார். நாம் மட்டுமல்ல வரலாற்றில் எந்த தலைமுறையுமே தனது வரலாற்றின் மீது அதீத ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை. 

    பள்ளி நேரத்தில் படித்து மறந்து போன யுவன் சுவாங் அவர்களின் இந்தியப் பயணத்தில் தொடங்கி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் வரை கிட்ட தட்ட மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றை இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் எஸ்.ரா. 

    எஸ்.ரா வின் பெரும்பாலான புத்தகங்கள் சாமானியனுக்கானவை. எளிய நடையில் அதே நேரம் காலத்தை தாண்டி நிற்கும் ஒரு படைப்புலகம் எஸ்.ரா வுடையது. 

புத்தகத்தில் உள்ள சில சுவாரசிய வரலாற்று குறிப்புகள்:

  • உஷா மெத்தா என்ற பெண் 1942ம் ஆண்டே ரகசிய ரேடியோ ஒன்றை நடத்தி வந்து அதற்காக ஆங்கிலேய அரசால் கைதும் செய்யப் பட்டிருக்கிறார்.
  • பார்சி இன மக்கள் பூர்விகம் மற்றும் அவர்கள் சென்னையில் வழிபாட்டிற்காக கட்டியுள்ள நெருப்பு ஆலயம்.
  • டில்லியில் வானவியல் ஆய்வுக்காக கட்டப்பட்ட ஜந்தர் மந்தர் மற்றும் அதில் உள்ள கருவிகள்.
  • இந்த விடுத்தலைக் காக முதன் முதலில் ஜப்பானில் வான்வழி தாக்குதல் பயிற்சி பெற்ற நேதாஜி தேர்வு செய்த படைப் பிரிவு.
  • தங்கள் ஆலயத்துள் பூட்ஸ் கால்கள் பதிய காரணமாக இருந்த பிரதமர் மீது குரோதம் கொண்ட சீக்கியர்களின் தாக்குதல்.
  • பெங்கால் பஞ்சம், காலிஸ்தான் போராளிகள்
 என இன்னும்எண்ணற்ற அறியஅறியப் படாத தகவல்கள் கொண்ட புத்தகம் மறைக்கப்பட்ட இந்தியா. விகடன் பிரசுரம் இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...