Skip to main content

மறைக்கப் பட்ட இந்தியா - S. Ramakrishnan

    வரலாற்றின் மீது எப்போதுமே எனக்கு தீராத ஆர்வம் உண்டு. நாளைய கேள்வியின் பதிலை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு நேற்று தான் வரலாறு. ஒருமுறை S.Ra அவர்கள் அமரிக்காவில் மிகத் தொன்மையான பொருள் என்றால் அதற்கு 500 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். அனால் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு மரக்காபடி பத்து தலைமுறையாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு பொருள் என்று கூறியுள்ளார். நாம் மட்டுமல்ல வரலாற்றில் எந்த தலைமுறையுமே தனது வரலாற்றின் மீது அதீத ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை. 

    பள்ளி நேரத்தில் படித்து மறந்து போன யுவன் சுவாங் அவர்களின் இந்தியப் பயணத்தில் தொடங்கி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் வரை கிட்ட தட்ட மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றை இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் எஸ்.ரா. 

    எஸ்.ரா வின் பெரும்பாலான புத்தகங்கள் சாமானியனுக்கானவை. எளிய நடையில் அதே நேரம் காலத்தை தாண்டி நிற்கும் ஒரு படைப்புலகம் எஸ்.ரா வுடையது. 

புத்தகத்தில் உள்ள சில சுவாரசிய வரலாற்று குறிப்புகள்:

  • உஷா மெத்தா என்ற பெண் 1942ம் ஆண்டே ரகசிய ரேடியோ ஒன்றை நடத்தி வந்து அதற்காக ஆங்கிலேய அரசால் கைதும் செய்யப் பட்டிருக்கிறார்.
  • பார்சி இன மக்கள் பூர்விகம் மற்றும் அவர்கள் சென்னையில் வழிபாட்டிற்காக கட்டியுள்ள நெருப்பு ஆலயம்.
  • டில்லியில் வானவியல் ஆய்வுக்காக கட்டப்பட்ட ஜந்தர் மந்தர் மற்றும் அதில் உள்ள கருவிகள்.
  • இந்த விடுத்தலைக் காக முதன் முதலில் ஜப்பானில் வான்வழி தாக்குதல் பயிற்சி பெற்ற நேதாஜி தேர்வு செய்த படைப் பிரிவு.
  • தங்கள் ஆலயத்துள் பூட்ஸ் கால்கள் பதிய காரணமாக இருந்த பிரதமர் மீது குரோதம் கொண்ட சீக்கியர்களின் தாக்குதல்.
  • பெங்கால் பஞ்சம், காலிஸ்தான் போராளிகள்
 என இன்னும்எண்ணற்ற அறியஅறியப் படாத தகவல்கள் கொண்ட புத்தகம் மறைக்கப்பட்ட இந்தியா. விகடன் பிரசுரம் இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...