Skip to main content

குமரித் துறைவி

 



சித்திரையோடு ஓட்டிப் பிறந்தது மதுரைக் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து நடை பெற்றுவரும் இந்த பெரு நிகழ்வின் தொடக்கத்தை விவரிக்கும் நூல்.

தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்திருக்க வேண்டிய, இன்னும் அறிந்திராத வரலாற்றை ஜெ அவரது இயல்பான மொழி நடையிலேயே விவரித்திருக்கிறார். டில்லி சுல்தானியர்கள் படையெடுப்பின் போது தமிழகத்தின் அனேக கோயில்களின் பொன்னும் மணியும் இறைவர் இறைவி விக்கிரகங்களும் போர்படையிடம் சிக்காதிருக்க மக்கள் அவற்றை வெகு தூரம் உள்ள பிற இடங்களில் மறைத்து அடை காத்து வந்தனர் .

திருவரங்க பெருமாள் உற்சவர் சிலையும் இதைப் போல தெற்கே கொண்டு சென்ற வரலாற்று கதை உண்டு. அவ்வாறே மாமதுரை நகரின் அரசி அன்னை மீனாட்சி சிலையையும், சொக்கனின் சிலை பிரம்மாண்ட ஸ்வரூபம் ஆததால் ஒரு சிறு கல்லில் அவரை ஆவாகனம் செய்து அந்த கல்லையும் ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா கோயிலில் மறைத்து வைத்து பூஜித்து வந்தனர்,

படைகள் முற்றிலும் வடக்கே திரும்பி கூடடைந்தது உறுதியான பின், பாண்டியர் ஆட்சி காலம் தொடங்கியதும் மக்கள் மீண்டும்  அம்மையின் சிலையினை வேண்டி அரசற்கு தூது விடுகின்றனர்.

அம்மையின் காலடி பட்ட க்ஷணத்திலுருந்து நாடும் மக்களும் செழித்திருக்க கண்ட மன்னன் அம்மையை அவள் சொந்த மண்ணிற்கே திருப்பி அனுப்புவதில் தயக்கம் காட்டுகிறார். அம்மை சென்றாள் அவளோடு கூட மண்ணின் சௌபாக்யமும் மண்ணை விட்டு பிரிந்து போகும் என்ற ஐயத்தோடு உள்ள அரசர்க்கு நம்பூதிரி மார் ஓர் உபாயத்தை உரைக்கிறார் .

 ஒரு பெண் எப்போது வீட்டை விட்டு சென்றாலும் அது அமங்கலம் தான், ஒரு முறையைத் தவிர. மனம் முடித்து தன் கணவனின் இல்லத்திற்கு செல்பவள் தன் பிறந்த வீட்டை லட்சுமி கடாக்ஷத்தோடு விட்டுச் செல்வாள். எனவே, சொக்கநாதருக்கு மனம் முடித்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறார். அரசனும் அதற்க்கு ஆமோதிக்கவே. நகரே விழாக்கோலம் பூண்டு மனா நாளிற்கு தயார் ஆகிறது .

அகிலத்தை ஆளும் அம்மைக்கும் அப்பனுக்கும் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும். ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து அம்மையை தன மடியில் ஏந்தி சொக்கருக்கு மனம் முடித்து வைக்கிறார்.

ஜெயமோகன் கதைகளில் வெளிப்படும் உணர்ச்சிக் குவியல்கள் அனைத்தையும் துறந்து முற்று முழுதாக நேர்மறை செய்திகளே நாவல் முழுதும் காணப் படுகின்றன . ஒரு வளற்று நிகழ்வில் புனைவு என்னும் தேன் சரியான விகிதத்தில் சேர்த்து விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர். 

ஜெயமோகன் இணையதளத்தில் மின்னூல் ஆகவும் படிக்க முடியும் ஆறு அத்தியாயங்களாக வெளி வந்துள்ளது .

 https://www.jeyamohan.in/145303/ 


Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...