Skip to main content

நூறு நாற்காலிகள் - வாசிப்பனுபவம்

 



புத்தகங்கள் தான் தனக்கான வாசகனை தீர்மானிக்கின்றன என்ற கூற்றில் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு. Youtubeல் பவா செல்லதுரை அவர்கள் இந்த கதை சொல்லிய காணொளியை பார்த்து புத்தகத்தை படித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே உறங்கினேன். மறுநாள் காலை நூலகத்திற்கு சென்ற போது தவழ்ந்து இப்புத்தகம் என்கைகளில் விழுந்தது.

நூறு நாற்காலிகள் ஜெயமோகன் அவர்களின் அறம் என்கிற உண்மை மனிதர்களை பற்றிய சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை. நாயாடிக் குறவர்களில் ஒரு இளைஞன் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரத்தில் பணியமர்த்தப் படுகிறான். தான் வளர்ந்த வாழ்வியல் கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறான அதிகார வர்கத்தை அடைந்த அந்த இளைஞனின் வாழ்க்கை விவரிக்கும் கதை, நூறு நாற்காலிகள்.

என்னளவில் புத்தகம் என்பது இதுவரை நான் காணாத ஒரு வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும். அவ்வகையில் இப்புத்தகம் தலைசிறந்த ஒரு வாசிப்பனுபவத்தை கொடுத்தது. படித்து முடித்து இரண்டு மூன்று நாட்கள் இக்கதையின் பாதிப்பில் இருந்து மீளவியலாது உலுக்கி போட்டது.

அதிகாரத்தின் அரியணையில் அமர்ந்த தர்மனை சாதிய ஒடுக்குமுறையின் தீக் கங்குகள் அவ்வப்போது தீண்டிப் பார்க்கின்றன. ஒவ்வொரு முறை தர்மனின் பின்னங் கண்கள் ஏளனத்தை எதிர்கொள்ளும்போதும் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள வேண்டும்போல் உணர்வு வாசகனுக்கு பீறிடும். 

நாயாடிகளை குறித்து நாயாடிகளுக்கே தெரியாது. ஒரு சமூகத்தின் மீதான ஒட்டுமொத்த வன்மத்தின் பிரதிநிதியாக பாலனின் மனைவியின் கதா பாத்திரம் புனையப் பட்டுள்ளது. சாமானியன் முகம் சுளிக்கும் வரிகள் அனேகம் கதை முழுக்க வருகிறதெனினும் அவை அத்தனையும் நாயடிகளின் இந்த சமூகம் அவர்களுக்கு அளித்த வாழ்க்கை முறையின் ஒரு சிறு பகுதியே. 

பாலன் ப்ரஜானந்தரின் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில் சு ரா வின் வீட்டில் உள்ள இளம் எழுத்தாளன் யார் என்பதை வாசகன் படித்த மட்டில் உணர்ந்துவிடக்கூடும் (!).

வாசிப்பு என்ன செய்யும் என்ற கேள்விக்கான பதிலாக இந்த நூல் அமைய கூடும். இருபத்தியோராம் நூற்றாண்டிலும் (இருபதாம் நூற்றாண்டின் பின்னணியில் கதை நடைபெறுகிறது) வளர்ந்துவிட்ட , நாகரீகம் மிக்க சமூகமாக தன்னை எண்ணிக் கொள்ளும் சமூகம் உண்மையில் வளர்ந்துவிட்டதா தன்னை பார்த்துக்கொள்ள ஒரு நிலை கண்ணாடியாக நீடித்திருக்கும்.


Comments

Post a Comment

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...