Skip to main content

நீரதிகாரம்

 நீரதிகாரம் 

        ஆனந்த விகடனில் வாரம் தோறும் எழுத்தாளர் அ வெண்ணிலா அவர்கள் நீரதிகாரம் என்னும் தொடரை எழுதிவருகிறார். முல்லை பெரியாறு அணையின் நெகிழ்ச்சியான  சரித்திரத்தை விவரிக்கும் தொடராக வெளிவருகிறது. 

        தாது வருடப் பஞ்சத்தில் (1870 களில்) தேசம் முழுதும் 2 கோடி மக்கள்  செத்து மடிந்தனர். மெட்ராஸ் ப்ரெசிடென்ஸியில் மட்டும் லட்சக் கணக்கில் மனிதப் பிணங்கள் குவித்துவைக்கப் பட்டன.குலக்கொடி வையை முழுதும் பொய்த்துப் பொய் தென் மாவட்ட மக்கள் மலையகத் தீவுகளுக்கு  கப்பலில் அடிமைகளாகவும் பஞ்சம் பிழைக்கவும் ஆயிரக் கணக்கில் தினந்தோறும் வெளியேறிக் கொண்டிருந்தனர். 

        பஞ்சத்தில் இருந்து எஞ்சிய மக்களை காக்கும் பொருட்டு மேற்காக ஓடும் பேரியாற்றை மதுரைக்கு திருப்ப அணை கட்டப் படுகிறது. ஒரு அணைக்  கட்டுமானம் அதுவும் நூறாண்டுகளாக கிடப்பில் இருக்கும் திட்டம் தொடங்குவதற்கு முன்னும், தொடங்கியபிறகும் அதனை சார்ந்துள்ள அத்தனை ஜீவராசிகளையும் எவ்வகையில் தொட்டு செல்கிறது என்னும் கதையை புனைவை கொண்டு தொட்டுப் பார்த்திருக்கிறார் வெண்ணிலா அவர்கள். 

        இன்று தமிழ் நாட்டில் நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் ஒரு துளியேனும் பெரியாற்றின் தண்ணீர் சேர்ந்திருக்கிறது. நம் தலைமுறை அறியவேண்டிய, அறிந்திராத வரலாறு பேரிலக்கியமாக நம் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. விகடன் சந்தா தாரர்கள் விகடன் இணையதளத்தில் மின்னிதழ் ஆகவும் படிக்கலாம். முதல் பாகமாக 32 அத்தியாயங்கள் இதுவரை வெளி வந்துள்ளன. இந்த வாரம் இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயமாக 33வது அத்யாயம் வெளிவந்துள்ளது.



படம் - விகடன் இணையதளம் 

முதல் அத்தியாயத்தின் சுட்டி

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...