Skip to main content

தண்ணீர் - அசோகமித்திரன் வாசிப்பனுபவம்



நீண்ட இடைவேளைக்கு பிறகு நூலகத்திலிருந்து இரவலாக ஒரு விடுமுறை நாளில் படித்து முடித்த நாவல். ஒரே மூச்சில் படித்து முடித்த மிகச் சில நாவல்களில் இதுவும் ஒன்று, கணையாழியில் தொடர்கதையாக வந்த காரணத்தால் ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்த அத்தியாயத்திற்கு இட்டுச் செல்லும் அமைப்பை கொண்டுள்ளது. (வேள்பாரியை போல).

தண்ணீர் - அசோகமித்திரன் வாசிப்பனுபவம்  

தண்ணீர்  - 1970களின் சென்னையில் நிலவிய தண்ணீர் பற்றாக் குறையின் பின்னிலையில் நிகழும் நாவல், அசோகமிதரனுக்கே உரிய நேர்த்தியான கதைசொல்லல் பாணியில் கதையும் கதை மாந்தர்களும் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. தண்ணீர் தட்டுப்பாடு என்னும் சூழல் நாவலின் மையச் சரடாக இருந்தாலும் வெறும் அவலங்களை அள்ளி அடுக்குவதாக அல்லாமல் அக்காலத்து மெட்ராஸ், மெட்ராஸின் மனிதர்கள், அவர்கள் வாழ்வியல் முறைகள், தண்ணீர் பற்றாக்குறையால் நிகழும் அன்றாட சிக்கல்கள், என ஒட்டுமொத்த குறுக்குவெட்டு தோற்றத்தையும் இந்நாவல் தருகிறது.

வீட்டுச் சுவர் ஏறி குதித்து தண்ணீர் எடுத்து வர ஜமுனா செல்லும் காட்சி பெண்கள் ரஃபேல் விமானம் ஓட்டும் தற்காலத்தில் மிக சாதாரணமான ஒன்றாக காட்சியளிக்கும் போதிலும் ஒரு குடம் தண்ணீருக்காக தட்டுபாடோடே மக்கள் வாழப் பழகியதை இலக்கியமாக்கி வெற்றியும் கண்டிருக்கிறார் அசோகமித்திரன்.

மழை பெய்து தெருவெல்லாம் சேராக திறண்டிருக்க நடந்து செல்லும் ஒவ்வொருவர் உடையிலும் அவரவர் நடையின் வேகத்திற்கேற்ப சேறு படிந்திருக்கும் என்னும் வரி மாஸ்டர் படைப்பாளிக்கே கைகூடி வரக்கூடிய எழுத்து.

வெறும் 136 பக்கங்களே உடைய ஒரு குறு நாவல் அநேக பாதிப்புகள் வந்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. நிச்சயம் தவற விடக்கூடாத வாசிப்பனுபவத்தை இந்நூல் தரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...