Skip to main content

திருச்சி புத்தகத் திருவிழா

மாலை ஆறுமணிக்கு S ரா சொற்பொழிவு என்ற அறிவிப்பை பார்த்து ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். அரை மணி நேரம் ஆகவேண்டிய பயணம் காவிரி பாலத்தின் குறுக்காக புதிய பாலம் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் மாற்று வழியில் ஒருமணி நேரம் பிடித்தது. முதல் முறையாக மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் பிரிட்டிஷ் காலத்திய ராணுவ மைதானத்தின் கல்வெட்டை கண்டேன். 

வெஸ்ட்ரீ பள்ளி மைதானத்தை நெருங்கும் போதே கலைநிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கும் புத்தக கடைகளுக்காக தனி அரங்குமாக இரண்டு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன.


கலை நிகழ்ச்சிகள் அப்போது தான் தொடங்கியிருந்ததால் முதலில் புத்தகங்களை பார்த்துவிட்டு பிறகு சொற்பொழிவு அரங்கத்திற்கு செல்லலாம் என்று நுழைந்தேன். பொன்னியின் செல்வன் வாங்குவதற்காக புத்தக கண்காட்சிக்கு வரும் மரபார்ந்த நிகழ்விற்கு திருச்சியும் விதிவிலக்கல்ல என்பதாக எந்த அரங்கில் நுழைந்தாலும் "பொன்னியின் செல்வன் இருக்கா" என்ற குரலை கேட்க முடிந்தது. கடந்த எழுபது ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களின் எண்ணிக்கையை, கடந்த இரண்டு ஆண்டுக்குள் புத்தகமாக சுருக்கிய வடிவாக ஒலி புத்தகமாக என பல்வேறு வடிவங்களில் வாசித்த எண்ணிக்கை விஞ்சக் கூடும். மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. 

கண்காட்சி தொடங்கிய தினத்தன்று நந்தலாலா எழுதிய ஊரும் வரலாறு என்ற நூல் வெளியிடப் பட்டது. திருச்சியை பற்றிய micro history வடிவிலான வரலாற்று நூல். நந்தலாலா இதை விகடனில் தொடராக எழுதி வந்தார். தற்போது அனைத்து கட்டுரைகளும் தொகுக்கப் பட்டு நூலாக வெளிவந்திருக்கிறது. இந்த கண்காட்சியில் வாங்க விரும்பிய முதல் புத்தகத்தில் இதுவும் ஒன்று. விகடன் அரங்கில் இந்த புத்தகத்தையும் மீனாட்சி புத்தக நிலையம் அரங்கில் ஆசான் ஜெயமோகனின் வெண்கடல் சிறுகதை தொகுப்பையும் பெற்று சொற்பொழிவு நடக்கும் அரங்கில் சென்றமர்ந்தேன். 



அரங்கிற்கு அருகில் S ரா வாசகர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் சமீபத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய மணியிடுங்கள் தந்தையே நாவலை படித்ததை குறித்து அவரிடம் பேச விரும்பி பின்பு தயங்கி தவிர்த்துவிட்டேன். ஏழரை மணிக்கு S ரா சொற்பொழிவு தொடங்கியது. வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். அநேக தலைப்புகளை தொட்டுச் செல்வதாக அமைந்த உரை. S ராவின் சொற்பொழிவை முதல் முறையாக நேரில் கேட்டது புதிய அனுபவமாக இருந்தது. 



சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அநேக கல்லூரி மாணவர்களையும் குழந்தைகளையும் கண்காட்சியில் காணமுடிந்தது. குடும்பமாக புத்தக கண்காட்சிக்கு மக்கள் சென்று வருவதை காட்டிலும் வேறென்ன உவகை தரும் செயல் இருக்கப் போகிறது சக வாசகனுக்கு.


Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...