Skip to main content

இந்திய இலக்கிய சிற்பிகள் - ஏ கே செட்டியார்



சாகித்ய அகாதமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற பெயரில் இலக்கிய முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியவாதிகளை கொண்டே வெளியிட்டு வருகிறது. அப்பர் , ஞானசம்பந்தர், அழ வள்ளியப்பா, பேரறிஞர் அண்ணாதுரை, ஜெயகாந்தன் என்று பலதரப்பட்ட ஆளுமைகளின் நூல்கள் வெளிவந்துள்ளன.  அந்த வரிசையில் ஏ கே செட்டியார் குறித்து சா. கந்தசாமி எழுதிய நூலை நேற்று முன்தினம் நூலகத்திலிருந்து எடுத்துவந்து நேற்றும் இன்றும் வாசித்து முடித்தேன். அதன் வாசிப்பனுபவ பகிர்வு,  இப்பதிவு.  

ஏ கே செட்டியார் தமிழில் பயணக் கட்டுரைகளின் முன்னோடி, இதழாசிரியர், முதன் முதலாக முழு நீள காந்தியின் ஆவணப் படத்தை தயாரித்தவர் என்ற மூன்று பரிமாணங்களை குறித்த முன்னுரையை சா கந்தசாமி அளிக்கிறார்.

உலகம் சுற்றிய தமிழன் என்று பெயர் பெற்ற செட்டியார், தென்னாபிரிக்கா,இலங்கை, லண்டன், ஜெர்மனி, ரங்கூன்  என்ற எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மலேயா முதல் கனடா வரை என்ற அவரது பயணக் குறிப்பு முக்கியமான பயணக் கட்டுரைகளில் ஒன்று. கப்பல், விமானம், ரயில், டிராம் பேருந்து, கட்டை வண்டி என்று பலவகையான பயணங்களை குறித்தும் அதில் சந்தித்த மனிதர்களையும் ஒவ்வொரு பயணத்தின்போதும் அந்தந்த நிலப் பரப்பின் பண்பாட்டு கலாச்சார வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார்.

இரண்டாவதாக குமரி என்ற இதழை தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். அதில் கட்டுரைகள், புகைப்படங்கள், கவிதைகள் என்று பல படைப்புகளை பிரசூரித்திருக்கிறார். நான் படித்த bishop heber மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர், Cristian Fredrick Schwartz அவர்களுக்கும் தஞ்சை மன்னர் சரபோஜிக்குமான குரு சீடன் உறவென்பது இதுவரை நான் அறிந்திராத செய்தி. அதைக்குறித்தும் செட்டியார் அவர்கள், அவரது கட்டுரைகளில் குறித்து வைத்திருக்கிறார். 

மூன்றாவது காந்தியடிகளின் ஆவணப் படம். காந்தியடிகளின் தீவிர பக்தரான இவரது எந்த ஒரு குறிப்பிலும் காந்தியாரின் வரி இல்லாது இருப் பதில்லை என்கிறார் சா க . 1937 ஆம் ஆண்டு தொடங்கி 1940ம் ஆண்டுவரை இரண்டாவது உலக யுத்தம் தொடங்கிய காலகட்டத்திலும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தும் அழிவின் விளிம்பில் இருந்த பல்வேறு ஆவணங்களை சேகரித்தும் கிட்டத்தட்ட 50,000 அடிகள் நீளமுள்ள படத்தை தயாரித்து பின் சில காட்சிகளை நீக்கி 12,000 அடி சென்சார் செய்து வெளியிட்டார். 15 ஆகஸ்ட், 1947ம் ஆண்டு விடுதலை தினத்தன்று ராஜேந்திர பிரசாத் (முதல் குடியரசுத் தலைவர்) போன்ற பெருந்தலைவர்களுக்கு இப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளார். பல திரையரங்குகள் படத்தை காட்சிப் படுத்த முன்வராத போதிலும் போர்பந்தரிலிருந்து (காந்தியடிகளின் பிறப்பிடம்) சென்னையில் குடியேறிய சயானி திரை அரங்கின் அதிபர் முன் வரவே பின் பல திரை அரங்குகளில் படம் திரையிடப் பட்டது. David Attenbrough விற்கு கிடைத்தது போன்ற நிதியுதவியும் தொழில்நுட்ப வசதிகள் ஏதுமில்லாமல் செட்டியார் சாத்தித்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழின் முக்கியமான இலக்கியவாதியான  ஏ கே செட்டியார் அவர்களை குறித்து அறிந்துகொள்ள இந்நூல் ஒரு நுழைவாயிலாக அமைந்தது.

பிகு: நான் படித்தது 2018ம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்பு ஏராளமான அச்சுப் பிழைகள், துணையெழுத்து பிழைகள் உள்ளன. வாசகர்கள் அதையும் கருத்தில்கொண்டு படிக்கவேண்டும்.



Comments

Popular posts from this blog

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...

கொட்டுக்காளி - Subtlety 🤍

இன்று மாலை கொட்டுக்காளி படம் பார்த்தேன். அதனை பற்றிய ரசனைக்குறிப்பு. வெகு நாட்களுக்குப்பின் ஒரு முழு தமிழ் படம் பார்த்த உணர்வு. சமீபத்தில் பார்த்த ஏறத்தாழ அனைத்து தமிழ் படங்களிலும் துப்பாக்கி குண்டுகள் முழங்கியவண்ணம் இருந்தன. சண்டைக்காட்சிகளின் மொத்த தொகுப்பாகவும் இடைச்செருகலாக சிறு வசனங்களாகவும் இருந்தன. கொட்டுக்காளி உண்மையில் பாலமலைக்கு ஷேர் ஆட்டோவில் நானும் நெருக்கி பிடித்துக்கொண்டு சென்று வந்த உணர்வை கொடுத்தது. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்  பல அடுக்குகள் கொண்ட உண்மைக்கு மிக நெருக்கமான சினிமா,  கொட்டுக்காளி . பின்னணி இசை இல்லை என்பது படத்தின் இன்னொரு தனித்துவம். அந்த இடைவெளியை இயற்கையின் சப்தத்தையும், நிசப்தத்தையும் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். ஒரு பேட்டியில் படத்தொகுப்பாளர் கதை ஒரே நாளில் நடப்பதால் வெயிலின் தொனி(tone) ஒன்றாக இருப்பதற்காக மெனக்கெட்டோம் என்று சொல்லியிருந்தார். ஒவ்வொரு காட்சியின் ஒளிக்கலவையிலும் ஒவ்வொரு புல்லின் அசைவில் வரும் ஒலியிலும் மெனக்கெடல் தெரிந்தது.   முதல் காட்சியில் மீனாவிற்கு வைக்கப்படும் திருநீறு நெற்றிப்பொட்டிற்கு நேராக அல்லாம...