Skip to main content

இந்திய இலக்கிய சிற்பிகள் - ஏ கே செட்டியார்



சாகித்ய அகாதமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற பெயரில் இலக்கிய முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியவாதிகளை கொண்டே வெளியிட்டு வருகிறது. அப்பர் , ஞானசம்பந்தர், அழ வள்ளியப்பா, பேரறிஞர் அண்ணாதுரை, ஜெயகாந்தன் என்று பலதரப்பட்ட ஆளுமைகளின் நூல்கள் வெளிவந்துள்ளன.  அந்த வரிசையில் ஏ கே செட்டியார் குறித்து சா. கந்தசாமி எழுதிய நூலை நேற்று முன்தினம் நூலகத்திலிருந்து எடுத்துவந்து நேற்றும் இன்றும் வாசித்து முடித்தேன். அதன் வாசிப்பனுபவ பகிர்வு,  இப்பதிவு.  

ஏ கே செட்டியார் தமிழில் பயணக் கட்டுரைகளின் முன்னோடி, இதழாசிரியர், முதன் முதலாக முழு நீள காந்தியின் ஆவணப் படத்தை தயாரித்தவர் என்ற மூன்று பரிமாணங்களை குறித்த முன்னுரையை சா கந்தசாமி அளிக்கிறார்.

உலகம் சுற்றிய தமிழன் என்று பெயர் பெற்ற செட்டியார், தென்னாபிரிக்கா,இலங்கை, லண்டன், ஜெர்மனி, ரங்கூன்  என்ற எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மலேயா முதல் கனடா வரை என்ற அவரது பயணக் குறிப்பு முக்கியமான பயணக் கட்டுரைகளில் ஒன்று. கப்பல், விமானம், ரயில், டிராம் பேருந்து, கட்டை வண்டி என்று பலவகையான பயணங்களை குறித்தும் அதில் சந்தித்த மனிதர்களையும் ஒவ்வொரு பயணத்தின்போதும் அந்தந்த நிலப் பரப்பின் பண்பாட்டு கலாச்சார வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார்.

இரண்டாவதாக குமரி என்ற இதழை தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். அதில் கட்டுரைகள், புகைப்படங்கள், கவிதைகள் என்று பல படைப்புகளை பிரசூரித்திருக்கிறார். நான் படித்த bishop heber மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர், Cristian Fredrick Schwartz அவர்களுக்கும் தஞ்சை மன்னர் சரபோஜிக்குமான குரு சீடன் உறவென்பது இதுவரை நான் அறிந்திராத செய்தி. அதைக்குறித்தும் செட்டியார் அவர்கள், அவரது கட்டுரைகளில் குறித்து வைத்திருக்கிறார். 

மூன்றாவது காந்தியடிகளின் ஆவணப் படம். காந்தியடிகளின் தீவிர பக்தரான இவரது எந்த ஒரு குறிப்பிலும் காந்தியாரின் வரி இல்லாது இருப் பதில்லை என்கிறார் சா க . 1937 ஆம் ஆண்டு தொடங்கி 1940ம் ஆண்டுவரை இரண்டாவது உலக யுத்தம் தொடங்கிய காலகட்டத்திலும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தும் அழிவின் விளிம்பில் இருந்த பல்வேறு ஆவணங்களை சேகரித்தும் கிட்டத்தட்ட 50,000 அடிகள் நீளமுள்ள படத்தை தயாரித்து பின் சில காட்சிகளை நீக்கி 12,000 அடி சென்சார் செய்து வெளியிட்டார். 15 ஆகஸ்ட், 1947ம் ஆண்டு விடுதலை தினத்தன்று ராஜேந்திர பிரசாத் (முதல் குடியரசுத் தலைவர்) போன்ற பெருந்தலைவர்களுக்கு இப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளார். பல திரையரங்குகள் படத்தை காட்சிப் படுத்த முன்வராத போதிலும் போர்பந்தரிலிருந்து (காந்தியடிகளின் பிறப்பிடம்) சென்னையில் குடியேறிய சயானி திரை அரங்கின் அதிபர் முன் வரவே பின் பல திரை அரங்குகளில் படம் திரையிடப் பட்டது. David Attenbrough விற்கு கிடைத்தது போன்ற நிதியுதவியும் தொழில்நுட்ப வசதிகள் ஏதுமில்லாமல் செட்டியார் சாத்தித்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழின் முக்கியமான இலக்கியவாதியான  ஏ கே செட்டியார் அவர்களை குறித்து அறிந்துகொள்ள இந்நூல் ஒரு நுழைவாயிலாக அமைந்தது.

பிகு: நான் படித்தது 2018ம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்பு ஏராளமான அச்சுப் பிழைகள், துணையெழுத்து பிழைகள் உள்ளன. வாசகர்கள் அதையும் கருத்தில்கொண்டு படிக்கவேண்டும்.



Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...