Skip to main content

பெங்களூர் இலக்கிய விழா


நேற்றும் இன்றும் பெங்களூர் இலக்கிய விழா நடைபெறுகிறது. "இரண்டுவேளை உணவை இந்த சமூகம் எனக்கு கொடுத்திருக்குமாயின் இன்னும் பல நல்ல கதைகளை எழுதியிருப்பேன்" என்று சொன்ன பிரபஞ்சன் வாழ்ந்த தேசத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழா. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள எந்த ஒரு கவிஞனுக்கோ படைப்பாளனுக்கோ இங்கு இடமில்லை. நன்கு குளிரூட்டப்பட்ட அறையில் புத்தக விற்பனை அரங்குகள், மூன்று இலக்கத்திற்கு குறைவான எந்த ஒரு பதார்த்தமும் கிடைக்காத உணவு அரங்குகள், நிரம்பி வழியும் வெள்ளை பலகையிட்ட மகிழுந்து நிறுத்தங்கள் என மேல்தட்டு மக்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இலக்கிய கூட்டமாக அமைந்தது.

                                  

மதியம் இரண்டு மணிக்கு VVS லக்ஷ்மன் பங்கேற்ற  ஒரு அரங்கில் அமர்ந்து அவரது வாழ்க்கை குறிப்புகளாக 281 and beyond என்ற புத்தகத்தை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது(இதற்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்மந்தம் என்று அடியேனும் அறியேன் !).

பின் உவே சாமிநாதய்யர் அவர்களின் கட்டுரைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள புத்தகத்தை குறித்த கலந்துரையாடல் அரங்கு. பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் நூலாசிரியர் பிரதீப் பங்குபெற்றனர். உரையாடலின் நடுவில் சில தமிழ் சொலவடைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றபோது Wow is it என்று வேற்று மொழி பேசுபவர்களின் சம்பாஷணைகள் கூசச் செய்தன. இவ்வகையேனும் உவேசா உலக அரங்கிற்கு செல்கிறார் என்றவகையில் மகிழ்ச்சி.

மாலை வாலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா அவர்களின் சொற்பொழிவு. மொத்த விழாவிலும் இந்த அரங்கில் தான் அதிகப் படியான வாசகர்கள் பங்கேற்றனர். Verrier Elwin புத்தகத்தை எழுதும் பொது கண்ட அனுபவங்களையும் காந்தியை குறித்த சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். 

தமிழில் இருந்து ஒன்று இரண்டு எழுத்தாளர்களே அழைக்கப் பட்டிருந்தனர். இன்று ஜெயமோகன் அவர்களின் அறம் ஆங்கில மொழிபெயர்ப்பான Stories of the true குறித்த அரங்கு நடைபெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதாவும் ஜெ வும் கலந்துகொண்டனர்.

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, s ரா போன்ற வறுமையை துரத்திய மகா கலைஞர்களை, அவர்களது படைப்புக்களை பின் தொடரும் வாசகனுக்கு எல்லா வகையிலும் ஒரு விலகத்தை நேற்றைய தினம் அளித்ததால் இன்று பங்கேற்கச்செல்லவில்லை.  

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...