Skip to main content

புல்லின் தழல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை நூலகத்திலிருந்து புல்லின் தழல் என்ற குறுநாவலை எடுத்துவந்தேன், 13 நிமிடங்களுக்கு முன் படித்து முடித்தேன். வெண்முரசு நாவல் வரிசையின் 26 நாவல்கள் அல்லாது, அதன் உட்கதைகளை தொகுத்து சில குறுநாவல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. செம்மணிக்கவசம் என்ற குறுநாவல்  கர்ணனின் கதையில் ஒரு சிறு பகுதியை மட்டும் கொண்டுள்ள ஒன்று. அதே போல் புல்லின் தழல், துரோணரின் கதையை மட்டும் கொண்டது.



இந்த குறுநாவல்களின் சிறப்பென்பது ஒவ்வொரு நாவலும் தன்னளவில் ஒரு முழு கதையம்சம் கொண்டது, அதை மட்டுமே தனியாக வசிக்கவும் வழிசெய்வது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குறுகுலக் கல்வியின் இறுதிநாளில் கதை தொடங்குகிறது. துரோணர் குருகாணிக்கையாக துருபதனை தேர்க்காலில் கட்டி இழுத்துவரும்படி கோருகிறார். ஏன் என்ற காரணத்தோடு துரோணரின் கதைக்கு செல்கிறது (yes, non linear narration).

பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் மாணவனாக இருந்த காலத்தில் , பதின் பருவத்தை கடந்து வந்து மாணவனாக துருபதன் ஆசிரமத்தில் இணைவது. பரத்வாஜர் பயிற்சி அளிக்க மறுத்துவிட துரோணரே குருவாக இருந்து அவருக்கு  விற்பயிற்சி அளித்தது, பயிற்சி முடித்து தன நாட்டின் ஒரு பாதியை துரோணருக்கு அளிக்க ஒப்புக்கொண்டு பிரிகிறார் துருபதன். பின் தனியனாக குருகுலம் தொடங்குவது, அஸ்வத்தாமனின் பிறப்பு, மகனுக்காக ஒரு பசு  யாசகம் கேட்டு அவர் துருபதன் மாளிகையை அடைவது, மறுத்ததுமல்லாமல் இழித்துரைத்து அனுப்பியது, தழலை துரோணருக்குள் விதைக்கிறது என நாவல் விரிகிறது.

அத்தழலை அணைத்துக்கொள்ள தன் மாணாக்கரிடம் இத்தகைய குருத்தட்சனையை வேண்டுகிறார். அதை சிரமேற்கொண்ட பாண்டவ, கௌரவ படைகள் போர் செய்து  துருபதை வீழ்த்துவதாக முடிவுறுகிறது.

நாவலில் சில சிலிர்ப்பூட்டும் தருணங்கள் பல வருகின்றன. குறிப்பாக 

  1. அஸ்வத்தாமனின் பிறவி ஏட்டை எழுதும் கணியர் அவன் அழிவற்றவனாக இருக்கப்போகிறான் என்று கணித்துச் சொல்லும் இடம் மயிர்கூச்செறிவது. (அபிமன்யுவின் மகன் உத்தரையின் வயிற்றில் கருவுற்றிருக்கையில் கருவையும் அழிக்கவல்ல ப்ரம்ஹாஸ்த்திரத்தை ஏவிவிட கிருஷ்ணர் அஸ்வத்தாமனை தண்டிக்கும்பொருட்டு போர் காயங்களுடன் எந்நாளும் மரிக்காத நிலையில் இருப்பாயென சாபம் அளிப்பர்)
  2. துருபதனுடன் போரிடும்போது துரியோதணன் அணியிலிருக்கும் கர்ணனின் போர்திறனை காணும் தர்மர் தன உள்ளுணர்வால் இவன் ஒருநாள் நம்மை எதிரித்து வில்லேந்துவான் என்கிறார்.
- மனோ 

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...