Skip to main content

ஆடு ஜீவிதம் - நாவல் வாசிப்பனுபவம்

வேலை நிமித்தமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளி ஒருவரின் வாழ்க்கையை சற்றும் புனைவில்லாமல் கூறும் வாழ்க்கை வரலாற்று நூல். 2009ம் ஆண்டு மலையாளத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்.




குடும்ப வறுமை காரணமாக 1992ம் ஆண்டு பல்லாயிரம் கனவுகளோடு சவுதிக்கு செல்லும் நஜீப் தான் கனவில் கண்ட எந்த ஒரு குணாதிசயமும் அல்லாத ஒரு வெற்று பாலை நிலத்தின் நடுவில் ஆட்டுப்பட்டியில்(மஸாரா) ஆடுமேய்க்க விதிக்கப் படுகிறார்.

கர்ப்பமுற்ற தன் மனைவியையும், உப்பா, உம்மாவையும் தனியாக விட்டுவிட்டு பிறக்கவிருக்கும் தன் மகன்/மகளுக்கு நல்லதொரு எதிர்காலத்திற்காக வெளிநாடு செல்ல முடிவு செய்கிறார் நஜீப். மலபார் மண்ணில் அன்றாடம் நீரை சுவாசித்தது மணல் அள்ளும் வேலையை செய்யும் நஜீப்பிற்கு குளிப்பதற்கும் இதர அன்றாட தேவைகளுக்கும் கூட சிறிதளவு நீர் தர மறுக்கும் அர்பாபிடம் மூன்று ஆண்டுகள் சிக்கி அவர் படும் இன்னல்களும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதும் தான் முழு நாவல்.

காலை கடனை முடித்து சுத்திக்காக ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை சிறிதளவு எடுத்த நஜீப்பிற்கு முதன் முதலாக அர்பாபிடமிருந்து முதுகை பிளக்கும் படியான அடி விழுகிறது. அன்று தொடங்கி வாழ்க்கை நஜீபை வதையின் அத்தனை விளிம்புகளுக்கும் இட்டுச்செல்கிறது.

காலையில் ஒரு குவளை ஆட்டுப்பால், அதுவும் அர்பாப் குடித்து முடித்து மீதம் வைத்தது, பின் நீரில் நனைத்த இரண்டு குபூஸ்கள் இரவிற்கு மீண்டும் இரண்டு குபூஸும் ஒரு குவளை நீரும் என்று ஆட்டின் வாழ்க்கை போல அன்றாடம் கடந்து செல்கிறது. அவ்வப்போது புல் மற்றும் கோதுமை தானியத்தை இறக்கிவிட்டு செல்லும் பாகிஸ்தானிய பட்டான் ஒருவரை தவிர எந்த ஒரு மனித வாடையும் இல்லாமல் நாட்கள் கடக்கின்றன நஜீப்பிற்கு. 

பகலில் தகிக்கும் பாலைவனம், இரவில் நடுங்கும் குளிருடன் ஒவ்வொரு நாளும் வலிகள் பீடித்த வாழ்க்கையே நஜீபினது. உடன் பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளுக்கு ஊரில் தான் கண்ட மனிதர்களின் பெயர்களான நபீல், அராவு ராவுத்தர், போச்சக்காரி ரமணி, மேரிமைமுனா, இண்டி பொக்கர், நண்டு ராகவன், பாரிப்பூ விஜயன், சக்கி, அம்மிணி, கௌசு, ரௌபாத் என்று ஒவ்வொரு பெயர்களாக வைத்து அவற்றுடன் வாழ பழகிக்கொள்கிறார். அவற்றை போல தனதும் ஒரு ஆட்டின் வாழ்க்கை தான், ஆர்பாபின் ஆணைகளை நிறைவேற்றுதலன்றி தன்னால் இயன்றது ஏதுமில்லை என்ற எண்ணத்தை அடைகிறார்.

அல்லாவின் கருணையால் அங்கிருந்து தப்புவதாக முடிவு செய்து, இப்ராஹிம் காதிரியின் துணையுடன் மூன்று நாட்கள் பாலை மணலில் ஓட்டம் பிடித்து விஷ பாம்புகள், பல்லிகள் என்று பல கொடுக்குகளிடமிருந்து தப்பித்து, நெடுஞ்சாலையை அடைந்து குஞ்சிக்கா துணையுடன் தாய் நாடு அடைகிறார்.

சில மக்களின் வாழ்க்கையை அறியும்போது தான் நமக்கு எத்தனை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை விதிக்கப் பட்டிருக்கிறது என்னும் புரிதல் வருகிறது. நஜீபின் கதை அத்தகையது. இன்றும் லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர் தொழிலாளிகளாக தன் தாய் நிலத்திலிருந்து அலைக்கழிக்கப்படும் எண்ணற்ற மனிதர்களுடன் என் எண்ணங்கள் நிலைத்திருப்பதாக.

இந்நாவலின் மையச்சரடாக என்னை கட்டிவைத்தது எதையேனும் பிடித்துக்கொண்டிருத்தல். கடவுள், இயற்கை என்று எதையேனும். ஒவ்வொரு முறை சிறு ஒளிக்கீற்று அகப்படும்போதெல்லாம் அது அல்லாவின் கருணை என்கிறார் நஜீப். ஒவ்வொரு தண்டனைக்கும் இது அல்லா நம் மீது கோபமாக இருப்பதென்கிறார். முதல் முறையாக குட்டையையும் பேரிச்சம் மரங்களையும் கண்டபோது இது அல்லா தன்மீது கொண்ட பிரியத்தினது என்கிறார். உங்களுக்கும் நான் பரிந்துரைப்பது அதையே. எதையேனும் பிடித்துக் கொண்டிருங்கள். இசை இலக்கியம், கடவுள் இயற்கை எதையேனும். அதுவே மீட்சி !!

- மனோ 


Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...