Skip to main content

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - பவா செல்லதுரை

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - ஒரு பேரன்புக்காரனின் பூங்கொத்து !


பவா செல்லதுரை சமீபத்திய கலை இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் புழங்கும் பெயர். பெருங்கதையாடல் என்னும் கதை சொல்லும் வடிவத்தை என் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர். ஜெயமோகனின் யானை டாக்டர், வெள்ளையானை, S ராமகிருஷ்ணனின் 
இடக்கை, இமையத்தின் செல்லாத பணம், சமீபத்தில் நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, செந்தில் ஜெகநாதனின் நித்தியமானவன் என்று பல நாவல்களை கதையாக சொல்லி பெரும் வாசகபரப்பிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார்.

சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய அவரது நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற சிறுகதை தொகுப்பினை குறித்த வாசிப்பனுபவம்.

முதலில் பவாவின் கதைகள் அறிமுகம் செய்வது பெரும் பாறைகளாலும் கட்டாந்தரைகளாலும் ஆன மலைப்பிரதேசத்தை. எங்கும் பச்சையம் நிறைந்த காவிரிக்கரையில் வாழும் எனக்கு பாறை முடுக்குகளும், பழங்குடியின மக்களும்,  நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஜெபங்களும் நான் கண்டிராத கதைக்களம். 

முகம் - ஒரு திருமணமும் அதில் ஒவ்வொரு முகத்திலும் காணும் உணர்ச்சி கொப்பளிப்புகளும் திருமண ஆல்பம் வரும்போது முற்றிலும் வேறு உச்சத்திற்கு சென்றுவிடுகின்றன. மழலை முகமும் அதன் கள்ளமற்ற தன்மையும் என்றும் கறைபடாதிருக்கிறது.

வேறு வேறு மனிதர்கள் - ஜேக்கப் சார் உம் அவரது கையறு நிலையும் கர்த்தரை தவிர வேறு எந்த ஒரு ஜீவனிடமும் பற்றற்று போன அவர் மனைவியின் வலியும்.

மண்டித்தெரு பரோட்டா சால்னா  - முதல் முறையாக தந்தையிடம் சொல் உதிர்க்கும் தனையனின் குரல். 

நடுத்தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கையில் "டேய் ஈஸ்வரா ஓட்றா  ஓட்றா நாலு ஸ்டிராங் டீ" என்று ஒரு குரல் வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் ஒரு வாத்தியார் வாழ்ந்து கொண்டிருப்பதில் அதிகபட்ச காயம் உனக்கு இன்னும் கூட புரிபடவில்லை என்பது பெரிய துயரம் தான்.

ஏழுமலை ஜமா - கலைஞன் அமரத்துவம் அடையும் ஒரு உட்ச தருணம், இந்த கதை. டோஸ்டோயேவ்ஸ்க்கியின் எந்த ஒரு கதைக்கும் நிகராக வைக்கக் கூடிய மகத்தான கதை. 

சிங்கார குளம் - தன்னை அறியாமலே பிஞ்சு கரங்களில் புரட்சி வெடிக்கும் தருணம்.

வேட்டை - தானும் இயற்கையும் என்றல்லாமல், இயற்கையின் ஒரு துளியே தானும் என்று ஏற்றுக்கொள்ளும் வேட்டைக்காரனின் கதை.

பச்சை இருளன் - மரகத லிங்கத்தின் வெளிச்சமும் இருளனின் திரட்சியும்.

ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் - நினைவோடையில் நீந்தும் மனிதனை குறித்த மாயாஜால யதார்த்தவாத கதை.

சத்ரு - ஒரு வயிற்றை ஊரே சேர்ந்து குளிர்விக்க, அதை பார்த்த மாரியாத்தா மொத்த ஊரையும் குளிர்விக்கிறாள்.

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை - தேவன் பிறப்பு கருவுற்ற அன்னைக்கு நற்செய்தி அறிவிக்கும் தருணம் 💙

இந்த 11 கதைகளையும் படித்து முடிக்கையில் ஒரு புத்துயிர்ப்பு தருணம் போல் தோன்றும். இந்த சமூகத்தை குறித்து நாம் புரிந்து வைத்துள்ள அத்தனை புரிதல்களையும் கலைத்து போடும். தி ஜா, ஜி நாகராஜன், கி ரா, வண்ணதாசன் என்ற மாமேதைகளின் வரிசையில் பவா தனக்கான இருக்கையை உறுதிசெய்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...