Skip to main content

நித்யவனம்



வெகுநாட்களுக்கு பின் ஒரு பதிவு. இனி தொடர்ச்சியாக கட்டுரைகள் பதிவிடப்படும். 

எனது இலக்கிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய விஷ்ணுபுரம் என்னும் நாவலின் பெயரிலான வாசகர் வட்ட நண்பர்கள் இனைந்து (முழுமையறிவு) Unified wisdom என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக தத்துவம், பண்பாடு, ஆலய கலை, இலக்கியம், மெய்யியல், தியானம், இசை, யோகம், விபாசனா, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் புத்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன 

ஈரோடு அருகே வெள்ளிமலை மலை தங்குமிடத்தில் வெறும் கேளிக்கைகளும் மூன்று நாட்களுக்கு ஒன்றென வந்து செல்லும் Trending குமிழிக்களின் சத்தம் ஏதும் கேட்காத ஒரு தூரத்தில் ஒரு இடத்தை தெரிவு செய்து உருவாக்கியிருக்கிறார்கள் . அனைத்து வகுப்புகளுக்கும் ஆசான் ஆணிவேர். அந்தந்த துறையில் ஆழ்ந்த ஞானம் கொண்ட நிபுணர்களை கொண்டே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உதாரணம் ஆலயக்கலை - ஜெயக்குமார் அவர்கள். தமிழ்நாட்டில் ஆலயம் மற்றும் சிற்பம் சார்ந்து முழு நேரமாக இயங்கி வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் ஒருவர். 

நான் சென்ற ஒரு ஆண்டாக வகுப்புகளில் பங்கு கொண்டிருக்கிறேன். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் நிகழும் அறுபாடாத ஞான சுடரை 21ம் நூற்றாண்டின் சிந்தனையாளனுக்கு கடத்தும் ஒரு முயற்சி.

குருகுலம் என்ற உடன் காலை 4 மணிக்கு எழுந்து ஆசிரியருக்கு பணிவிடைகள் செய்வது அல்ல. ஜெ வேதாந்த மரபில் வந்தவர். ஆகவே எந்த ஒரு சடங்கு சம்பிரதாய ஆச்சாரவாதங்களுக்கு  முற்றிலும் எதிரானவர். வகுப்புகள் முற்றிலும் கல்வியை மட்டுமே முன்னிறுத்தி அதன் பொருட்டு இத்தனை தூரம் பயணம் செய்து, சிந்தை, உழைப்பு, நேரம் ஆகியவற்றை கொடுக்க வருபவர்களுக்கு மட்டுமாக அத்தகையோரின் வழி நடத்தப்படுவது.

வகுப்புகள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டும். மீண்டும் திங்கள் காலை அன்றாட சக்கரத்தில் சிக்கிக்கொள்ளலாம். நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் யோகா வகுப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

நான் இதுவரை ஆலயக்கலை, யோகா, சைவ திருமுறைகள், ஜெவின் தத்துவம் முதல் வகுப்பு அபுனைவு வாசிப்பு பயிலரங்கு மற்றும் குரு பூர்ணிமா நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கிறேன்.

அத்தனை உணர்வுகளையும் தொகுத்து கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இந்த தளத்திலும் பின்னர் வெளிவரும். நான் தொடர்ந்து இந்த வகுப்புகளில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.

சைவ திருமுறைகள் வகுப்பில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சொன்ன ஒன்று. நாயன்மார்கள் ஈசனின் திருவிளையாடல்களுக்கு அகச்சான்றாக இருக்கின்றனர் என்று. அவர்கள் தாங்களே அனுபவித்தவற்றை தொகுத்திருக்கிறார்கள். இந்த வகுப்புகளுக்கு நான் அகச்சான்று உரைக்கிறேன்.

Unified Wisdom 

nithyavanam.in/

Maps

- மனோ 


Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...