Skip to main content

நித்யவனம்



வெகுநாட்களுக்கு பின் ஒரு பதிவு. இனி தொடர்ச்சியாக கட்டுரைகள் பதிவிடப்படும். 

எனது இலக்கிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய விஷ்ணுபுரம் என்னும் நாவலின் பெயரிலான வாசகர் வட்ட நண்பர்கள் இனைந்து (முழுமையறிவு) Unified wisdom என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக தத்துவம், பண்பாடு, ஆலய கலை, இலக்கியம், மெய்யியல், தியானம், இசை, யோகம், விபாசனா, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் புத்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன 

ஈரோடு அருகே வெள்ளிமலை மலை தங்குமிடத்தில் வெறும் கேளிக்கைகளும் மூன்று நாட்களுக்கு ஒன்றென வந்து செல்லும் Trending குமிழிக்களின் சத்தம் ஏதும் கேட்காத ஒரு தூரத்தில் ஒரு இடத்தை தெரிவு செய்து உருவாக்கியிருக்கிறார்கள் . அனைத்து வகுப்புகளுக்கும் ஆசான் ஆணிவேர். அந்தந்த துறையில் ஆழ்ந்த ஞானம் கொண்ட நிபுணர்களை கொண்டே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உதாரணம் ஆலயக்கலை - ஜெயக்குமார் அவர்கள். தமிழ்நாட்டில் ஆலயம் மற்றும் சிற்பம் சார்ந்து முழு நேரமாக இயங்கி வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் ஒருவர். 

நான் சென்ற ஒரு ஆண்டாக வகுப்புகளில் பங்கு கொண்டிருக்கிறேன். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் நிகழும் அறுபாடாத ஞான சுடரை 21ம் நூற்றாண்டின் சிந்தனையாளனுக்கு கடத்தும் ஒரு முயற்சி.

குருகுலம் என்ற உடன் காலை 4 மணிக்கு எழுந்து ஆசிரியருக்கு பணிவிடைகள் செய்வது அல்ல. ஜெ வேதாந்த மரபில் வந்தவர். ஆகவே எந்த ஒரு சடங்கு சம்பிரதாய ஆச்சாரவாதங்களுக்கு  முற்றிலும் எதிரானவர். வகுப்புகள் முற்றிலும் கல்வியை மட்டுமே முன்னிறுத்தி அதன் பொருட்டு இத்தனை தூரம் பயணம் செய்து, சிந்தை, உழைப்பு, நேரம் ஆகியவற்றை கொடுக்க வருபவர்களுக்கு மட்டுமாக அத்தகையோரின் வழி நடத்தப்படுவது.

வகுப்புகள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டும். மீண்டும் திங்கள் காலை அன்றாட சக்கரத்தில் சிக்கிக்கொள்ளலாம். நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் யோகா வகுப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

நான் இதுவரை ஆலயக்கலை, யோகா, சைவ திருமுறைகள், ஜெவின் தத்துவம் முதல் வகுப்பு அபுனைவு வாசிப்பு பயிலரங்கு மற்றும் குரு பூர்ணிமா நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கிறேன்.

அத்தனை உணர்வுகளையும் தொகுத்து கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இந்த தளத்திலும் பின்னர் வெளிவரும். நான் தொடர்ந்து இந்த வகுப்புகளில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.

சைவ திருமுறைகள் வகுப்பில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சொன்ன ஒன்று. நாயன்மார்கள் ஈசனின் திருவிளையாடல்களுக்கு அகச்சான்றாக இருக்கின்றனர் என்று. அவர்கள் தாங்களே அனுபவித்தவற்றை தொகுத்திருக்கிறார்கள். இந்த வகுப்புகளுக்கு நான் அகச்சான்று உரைக்கிறேன்.

Unified Wisdom 

nithyavanam.in/

Maps

- மனோ 


Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...