Skip to main content

பாரத தருணங்கள்


ஓவியம் - ஷண்முகவேல்

மகாபாரதத்தின் நவீன ஆக்கமான உலகின் மிகப்பெரும் நாவல் வரிசைகளில் ஒன்றான வெண்முரசு படித்துக்கொண்டிருக்கிறேன். 26 நாவல்கள் 25000 பக்கங்கள் என வாழ்நாள் முழுமைக்கும் துணைவரும் நாவல் தொகுதி, வெண்முரசு. அதில் எனக்கு பிடித்த தருணங்களை தொகுக்கும் பொருட்டு இந்த கட்டுரை வரிசை. 

தற்போது படித்துக்கொண்டிருப்பது பிரயாகை, நாவல் 5. வரனாவதத்தின் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த பாண்டவரும் குந்தியும் காட்டில் மறைந்து வாழ்கின்றனர். இடும்பியை மணந்து கடோத்கஜனை பெற்றெடுக்கிறான் பீமன்.

பீமன், இடும்பி, கடோத்கஜன் மூவரும் பொன்னொளிர் வீசும் சூரிய அஸ்தமனத்தை மரத்தின் மீது அமர்ந்து கண்டு கழிக்கின்றனர். பீமன் இடும்பி மற்றும் தன் மகனிடம் மிக நெருக்கமாக உணரும் ஒரு கவித்துவ தருணம் இது அத்தியாயம் - 63. ஒரு மந்தனுக்கு மிகவும் உவப்பான ஒரு Couple goal இந்த தருணம். இத்தனை அத்தியாயத்தில் பீமன் வேறு எந்த மானுடருடனும் அணுக்கமாக இருக்கும் காட்சி நான் படித்ததில்லை. 

அந்த பொழுது விடிவதற்குள் அவர்கள் காட்டை விட்டு விலகும்படி ஆகிறது. இரவில் இடும்பர் குலத்தில் எவரும் காட்டை விட்டு விலகக்கூடாது என்பது அவர்கள் நெறி. காடொத்கஜன் பாண்டவரிடம் ஆசி வாங்கி விடைபெறுகிறான். காட்டிற்குள் முழுவதுமாக இடும்பியும் காடொத்கஜனும் நுழைவதை பார்த்துக்கொண்டிருக்கும் பீமனை தேற்ற வார்த்தையின்றி குந்தி அமர்ந்திருக்கிறாள்.

வெண்முரசு தமிழ் விக்கி










Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...