Skip to main content

பாரத தருணங்கள்


ஓவியம் - ஷண்முகவேல்

மகாபாரதத்தின் நவீன ஆக்கமான உலகின் மிகப்பெரும் நாவல் வரிசைகளில் ஒன்றான வெண்முரசு படித்துக்கொண்டிருக்கிறேன். 26 நாவல்கள் 25000 பக்கங்கள் என வாழ்நாள் முழுமைக்கும் துணைவரும் நாவல் தொகுதி, வெண்முரசு. அதில் எனக்கு பிடித்த தருணங்களை தொகுக்கும் பொருட்டு இந்த கட்டுரை வரிசை. 

தற்போது படித்துக்கொண்டிருப்பது பிரயாகை, நாவல் 5. வரனாவதத்தின் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த பாண்டவரும் குந்தியும் காட்டில் மறைந்து வாழ்கின்றனர். இடும்பியை மணந்து கடோத்கஜனை பெற்றெடுக்கிறான் பீமன்.

பீமன், இடும்பி, கடோத்கஜன் மூவரும் பொன்னொளிர் வீசும் சூரிய அஸ்தமனத்தை மரத்தின் மீது அமர்ந்து கண்டு கழிக்கின்றனர். பீமன் இடும்பி மற்றும் தன் மகனிடம் மிக நெருக்கமாக உணரும் ஒரு கவித்துவ தருணம் இது அத்தியாயம் - 63. ஒரு மந்தனுக்கு மிகவும் உவப்பான ஒரு Couple goal இந்த தருணம். இத்தனை அத்தியாயத்தில் பீமன் வேறு எந்த மானுடருடனும் அணுக்கமாக இருக்கும் காட்சி நான் படித்ததில்லை. 

அந்த பொழுது விடிவதற்குள் அவர்கள் காட்டை விட்டு விலகும்படி ஆகிறது. இரவில் இடும்பர் குலத்தில் எவரும் காட்டை விட்டு விலகக்கூடாது என்பது அவர்கள் நெறி. காடொத்கஜன் பாண்டவரிடம் ஆசி வாங்கி விடைபெறுகிறான். காட்டிற்குள் முழுவதுமாக இடும்பியும் காடொத்கஜனும் நுழைவதை பார்த்துக்கொண்டிருக்கும் பீமனை தேற்ற வார்த்தையின்றி குந்தி அமர்ந்திருக்கிறாள்.

வெண்முரசு தமிழ் விக்கி










Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...