Skip to main content

ஆகாயத்தாமரை - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை நாவல் வாசிப்பனுபவம்.



 2 3 வாரங்களாக மிக மெல்ல, அல்லது நகராது இருந்த வாசிப்பை மீட்டெடுக்க சரளமான easy read ஏதேனும் தேடிக்கொண்டிருந்தபோது புத்தக கண்காட்சியில் வாங்கிய ஆகாயத்தாமரை நாவல் கண்ணில் பட்டது. 

வாழ்விலே ஒருமுறை தொகுப்பு, தண்ணீர் நாவல், மற்றும் சில அசோகமித்திரனின் படைப்புக்களை வாசித்திருக்கிறேன். எளிமையான அதே நேரம் திடமான, முடித்து விட்டு நாம் தனியாக அமர்ந்து சிந்திக்க பல துளிகளை வழங்கும் எழுத்து அசோகமித்திரனுடையது. 

பகடியும் அங்கதமும் இரு இறகுகளாக கொண்டு பறப்பவர். ஒரு சிறுகதையில் நெற்றி நிறைய திருநீறுடன் நடந்து வந்தார். எங்கே குப்புற விழுந்து விடுவாரோ என்று பயமாக இருந்தது என்கிறார். அந்த ஒரு வரியை கொண்டே நாளை கடத்திவிடமுடியும். அன்றைக்கான எல்லா சத்துக்களும் அந்த ஒரு வரியில் உள்ளன.

நான் இலக்கிய வாசிப்பை இரண்டு வகையாக பிரித்துக்கொள்வேன் எனக்கு புரிதலுக்காக. முதல் வகை கற்பனையில் எட்ட முடியாத தூரத்திற்கு கதையையும் மாந்தர்களை சிருஷ்டித்து கதை சொல்வது. வெண்முரசு கொற்றவை போன்ற பெருங்காவியங்கள் உதாரணம். முழுவதுமாக நம்மை ஒப்புக்கொடுப்பவை. இரண்டாம் வகை அதிகமும் நமக்கு அணுக்கமான நிகழ்வுகள், இடங்கள், மனிதர்களை கொண்டு கதை சொல்வது. சற்று பொறுத்தால் கதை மாந்தர்களை சந்தித்து கை குலுக்க முடியும்.

அசோகமித்திரன் படைப்புலகம் என் வசிப்பிற்கெட்டியவரையில் இரண்டாம் வகை. அவர் காண்பித்த சென்னை இன்றும் காண கிடைக்கிறது. புலி கலைஞன் இன்றும் ஏதோ ஒரு சினிமா அலுவலகத்தில் வாய்ப்பு கேட்டு வந்துகொண்டு தான் இருப்பான்.  

ஆகாயத்தாமரை என்ற தாவரம் தான் படிமம். வேலை பார்க்கும் இடத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு ஓவிய கண்காட்சியில் உதவியாளராக பங்கேற்று அதற்கென்று ஒரு ஊதியம் பெற்று கொள்கிறான் ரகு. அதன் பொருட்டு இடைநீக்கம் செய்யப்படுகிறான். மீண்டும் பணியில் சேர்வதற்குள் அவனை சுற்றியும் அவனுக்குள்ளும் நடக்கும் நிகழ்வுகள், அலைக்கழிப்புகள், கொந்தளிப்புகள் தான் நாவல்.

ரகுவுக்கும் அவன் அன்னைக்கும் நடக்கும் உரையாடல்கள் பல முறை நாம் நமது அன்னையுடன் நடத்தியதாக இருக்கும். பாலகிருஷ்ணனை போன்று அசரீரியான மனிதர்கள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருப்பர். 

ராஜப்பா ரகு மற்றும் மாலதியை சந்திக்கும் அந்த சிறு பொழுது மட்டுமே சுதந்திரமாக இருக்க முடிகிறது. அந்த சுதந்திரமான விசிராந்தையான வாழ்வு ரகுவிற்கு மீண்டும் பணியில் சேர்ந்த பின் அமைகிறது. அசோகமித்திரன் காட்டும் மனிதர்கள் அனைவரும் நாம் எங்கோ சந்தித்த முகங்களாக இருக்கின்றனர். நேற்று கூட ராஜாப்பாவை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். ஆனால் பார்க்க தவற விட்ட அவரது பக்கங்களை அறிமுகம் செய்வதாக கதையோட்டம் இருக்கும்.

ஒரு மேகம் கடந்து போவது போன்றதொரு வாசிப்பு ஆகாயத்தாமரை. தண்ணீர், கரைந்த நிழல்கள் அளவிற்கு கவனம் பெறாத ஆகாயத்தாமரை நிச்சயம் வாசிக்கவேண்டிய நாவல்.



Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...