Skip to main content

Legends of Shiva ஆவணப்படம்



        ஆழித்தேரில் அமர்பவன் ஆரூர் அமர்ந்த அரசன். வெயில் படாத திருமேனி. ஒவ்வொரு புறப்பாடும் பேரரசனுக்கான உபசாரங்கள். ஆழித்தேர் நடந்த மூன்றாம் நாள் மயிலையில் அறுபத்துமூவர் புடைசூழ வரும் கபாலியை ஒரு சிறுவன் "கபாலி போய்ட்டானா இப்போ எங்க இருக்கான்" என்று கேட்டான். தென் திசை அமர்ந்த ஆலமர் செல்வனிலிருந்து ஊர்த்துவ தாண்டவம் ஆடுவோன் வரைக்கும் எத்தனை ரூபங்கள், எத்தனை தொன்மங்கள்.

        Legends of Shiva with Amish என்ற Discovery நிறுவனத்தின் ஆவணப்படம் இந்தியா மற்றும் நேபாளின் சில சிவதொன்மங்களை விளக்கும் மூன்று பகுதி தொடர். 

        முதல் பகுதி இமயத்தில் தொடங்கி கேதார்நாத், உத்தர்காண்டில் த்ரியுகிநாராயன், திரிபுராவின் Lost faces, காசியின் விஸ்வநாதர், மாமிசம், மது படையல் ஏற்கும் கால பைரவர், மணிகர்ணிகா காட் இன் சாதுக்கள் பகுதிகளை குறித்தது.  

        இரண்டாம் பகுதி நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாதர், குறி இல் உள்ள Shamnas சமூகத்தினர், Gosainkund உஜ்ஜைனி மஹாகாலேஷ்வர், பெருஞ்சிவனிரவின் சில தொன்மங்கள், மத்திய பிரதேசத்தின் சௌராகர், எல்லோரா கைலாசநாதர் குடைவரை கோயில், மஹாராஷ்டிரத்தின் ஜேசூரியில் உள்ள கண்டோபா(மல்லுகான்) என்ற இஸ்லாமியர்கள் வணங்கும் சிவ வடிவம் ஆகியவற்றை குறித்தது. 

        மூன்றாம் பகுதி தென்னகத்தில் உள்ள சிவ வடிவங்கள். கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், தில்லை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள French instituteல் ஆகம ஓலைச்சுவடிகளை இணையத்தில் பதிவேற்றும் குழுவை குறித்தும் பேசுகிறது. தில்லை குறித்த பகுதியில் எங்கள் ஆசிரியர் பேசியிருப்பதால் அதை முதலில் பார்த்தேன்.


        மொத்த சிவ தொன்மங்களையும் ஒரு ஆவணப்படத்திற்குள் அடக்குவது கடினம். குறுக்குவெட்டாக சில புள்ளிகளை மட்டும் இட்டு செல்கிறது.

ஆவணப்பட சுட்டி Link

பிகு 1: ஆவணப்படத்தை மட்டும் பரிந்துரைக்கிறேன், Shiva triologyயை அல்ல.

பிகு 2: இது ஒரு premimum தொடர், எனது கணக்கை பயன்படுத்திக்கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...