Skip to main content

Legends of Shiva ஆவணப்படம்



        ஆழித்தேரில் அமர்பவன் ஆரூர் அமர்ந்த அரசன். வெயில் படாத திருமேனி. ஒவ்வொரு புறப்பாடும் பேரரசனுக்கான உபசாரங்கள். ஆழித்தேர் நடந்த மூன்றாம் நாள் மயிலையில் அறுபத்துமூவர் புடைசூழ வரும் கபாலியை ஒரு சிறுவன் "கபாலி போய்ட்டானா இப்போ எங்க இருக்கான்" என்று கேட்டான். தென் திசை அமர்ந்த ஆலமர் செல்வனிலிருந்து ஊர்த்துவ தாண்டவம் ஆடுவோன் வரைக்கும் எத்தனை ரூபங்கள், எத்தனை தொன்மங்கள்.

        Legends of Shiva with Amish என்ற Discovery நிறுவனத்தின் ஆவணப்படம் இந்தியா மற்றும் நேபாளின் சில சிவதொன்மங்களை விளக்கும் மூன்று பகுதி தொடர். 

        முதல் பகுதி இமயத்தில் தொடங்கி கேதார்நாத், உத்தர்காண்டில் த்ரியுகிநாராயன், திரிபுராவின் Lost faces, காசியின் விஸ்வநாதர், மாமிசம், மது படையல் ஏற்கும் கால பைரவர், மணிகர்ணிகா காட் இன் சாதுக்கள் பகுதிகளை குறித்தது.  

        இரண்டாம் பகுதி நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாதர், குறி இல் உள்ள Shamnas சமூகத்தினர், Gosainkund உஜ்ஜைனி மஹாகாலேஷ்வர், பெருஞ்சிவனிரவின் சில தொன்மங்கள், மத்திய பிரதேசத்தின் சௌராகர், எல்லோரா கைலாசநாதர் குடைவரை கோயில், மஹாராஷ்டிரத்தின் ஜேசூரியில் உள்ள கண்டோபா(மல்லுகான்) என்ற இஸ்லாமியர்கள் வணங்கும் சிவ வடிவம் ஆகியவற்றை குறித்தது. 

        மூன்றாம் பகுதி தென்னகத்தில் உள்ள சிவ வடிவங்கள். கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், தில்லை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள French instituteல் ஆகம ஓலைச்சுவடிகளை இணையத்தில் பதிவேற்றும் குழுவை குறித்தும் பேசுகிறது. தில்லை குறித்த பகுதியில் எங்கள் ஆசிரியர் பேசியிருப்பதால் அதை முதலில் பார்த்தேன்.


        மொத்த சிவ தொன்மங்களையும் ஒரு ஆவணப்படத்திற்குள் அடக்குவது கடினம். குறுக்குவெட்டாக சில புள்ளிகளை மட்டும் இட்டு செல்கிறது.

ஆவணப்பட சுட்டி Link

பிகு 1: ஆவணப்படத்தை மட்டும் பரிந்துரைக்கிறேன், Shiva triologyயை அல்ல.

பிகு 2: இது ஒரு premimum தொடர், எனது கணக்கை பயன்படுத்திக்கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...