Skip to main content

Posts

ஸ்ரீரங்கத்து ஹொய்சாளர் கற்றளி ✨

Recent posts

Legends of Shiva ஆவணப்படம்

          ஆழித்தேரில் அமர்பவன் ஆரூர் அமர்ந்த அரசன். வெயில் படாத திருமேனி. ஒவ்வொரு புறப்பாடும் பேரரசனுக்கான உபசாரங்கள். ஆழித்தேர் நடந்த மூன்றாம் நாள் மயிலையில் அறுபத்துமூவர் புடைசூழ வரும் கபாலியை ஒரு சிறுவன் " கபாலி போய்ட்டானா இப்போ எங்க இருக்கான் " என்று கேட்டான். தென் திசை அமர்ந்த ஆலமர் செல்வனிலிருந்து ஊர்த்துவ தாண்டவம் ஆடுவோன் வரைக்கும் எத்தனை ரூபங்கள், எத்தனை தொன்மங்கள்.           Legends of Shiva with Amish என்ற Discovery நிறுவனத்தின் ஆவணப்படம் இந்தியா மற்றும் நேபாளின் சில சிவதொன்மங்களை விளக்கும் மூன்று பகுதி தொடர்.            முதல் பகுதி இமயத்தில் தொடங்கி கேதார்நாத், உத்தர்காண்டில் த்ரியுகிநாராயன், திரிபுராவின் Lost faces,  காசியின் விஸ்வநாதர், மாமிசம், மது படையல் ஏற்கும் கால பைரவர்,  மணிகர்ணிகா காட் இன் சாதுக்கள்  பகுதிகளை குறித்தது.             இரண்டாம் பகுதி நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாதர், குறி இல் உள்ள Shamnas ...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

அனாகதநாதம் - மதிப்புரை

           அனாகத நாதம் செந்தில் ஜெகந்நாதனின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.                  அனாகத நாதம் கதையில் சாமிநாதன் பேருந்தில் எறியபோதே இவர எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சிந்தித்து கொண்டே வாசித்து முடித்தேன். 2023 மார்ச் தமிழினியில் கதை வந்தபோதே படித்திருக்கிறேன். இப்போது தான் கதை எனக்கு திறந்திருக்கிறது. கதை படித்து முடித்த பின்னும் மழை கொட்டிக்கொண்டிருப்பது போன்று நாதம் கேட்டுகொண்டே இருக்கிறது. எத்தனையோ நாட்கள் வாசிக்க முயன்று முயன்று திரும்பி வந்தவன் அந்த ஒருநாளுக்குள் சாமிநாதன் உள்ளும் புறமுமாக வெகுதூரம் பயணித்து வந்திருக்கிறான்.           அலகிலா விளையாட்டு கதையில் பதின் பருவத்தின் மனநிலையை லகுவாக கை கூடி வந்திருக்கிறது. எம் ஜி ஆர் பிறந்த நாட்களின்போது தெருவை அடைத்தபடி மேடையிட்டு நடக்கும் கட்சி நாடகங்கள் பொதுக்கூட்டங்கள் "நான் ஆணையிட்டால்" போன்ற பாட்டுகளுக்கு குறைந்த விலை எம் ஜி ஆர்களின் நடனம் போன்ற நினைவுகளை மீட்டியது. புடவியின் அலகிலா விளையாட்டு  ஆச்சியை கொண...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...