Skip to main content

ஒரு துளி இலக்கியம்

ஒரு துளி இலக்கியம்

வாசிப்பு நேரம் - 4 நிமிடங்கள்  

        ஒவ்வொரு புலரியும் புதிய தன்னளவில் முழு வாழ்க்கை. நாளின் முதல் ஒரு மணி நேரம் தான் அந்நாளை முழுமையாக எவ்வாறு கடக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும் என்பர். முதல் ஒரு மணி நேரத்தை ஆக்கப் பூர்வமாக நேர்மறையான எண்ணங்களை கொண்டு நிரப்பிடுவது இன்றியமையாத ஒன்று. 

        நம்மில் பெரும்பாலானோர் அந்த முதல் ஒரு மணி நேரத்தை பெரும்பாலும் சமூக வலைதளத்தில் கழிக்கின்றோம். பற்குச்சியையும், செல்பசியையும் ஒரு சேர கையில் எடுக்கின்றோம். சமூக விலங்கான மனிதனுக்கும் உலகத்தோடு ஒன்றி இருக்க சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்று கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நாளில் முதல் வேலையான முகம் காட்ட தயங்கும் கோழையோடு சண்டையிடுதல் இருபத்தி நான்கு மணி நேரத்தை தீயிட்டு கொழுத்துவதற்கு சமம்.

        சமூக வலைத்தளங்கள் வசை தலங்களாக பெருகி வருகின்றன. (வன்மமாருகளால் நிரம்பி வழிகின்றன). அவ்வாறு தொடங்கும் நாள் ஒருவகையான இறுக்கத்தை கொடுத்துவிடும். 

        அதற்கு மாற்றாக ஒரு துளி இலக்கியத்தை புசிக்க அழைப்பதே இப்பதிவு. தமிழ் இலக்கியம் வாய் மொழிகளாக, பாறை ஓவியங்களாக, கல்வெட்டுகளாக , ஓலைகளாக, புத்தகங்களாக பல வடிவங்களை கடந்து வந்துள்ளது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் வடிவமான இணையத்தையும் ஏற்றுக் கொள்ள தொடங்கியுள்ளது. 

        எந்த ஒரு இலக்கிய படைப்பும், புத்தகமோ கவிதையோ சிறுகதையோ நம் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடுமா என்றல் இல்லை. ஒரு சிறிய மாற்றத்தை தான் கொடுக்கும். வெய்யோன் அளவுக்கல்லாது சிறிய தீபத்தின் வெளிச்சத்தை தான் பாய்ச்சும். அவ்வெளிச்சம் மனிதத்தை இயற்கையை அதன் மேன்மைகளை ஒரு படி அதிகம் போற்ற வழி கோலும்.

        நான் அறிந்த அன்றாடம் வாசிக்கின்ற இணைய பக்கங்களை பகிர விழைகிறேன்.

  • ஜெயமோகன் அவர்களின் இணையதளம் அன்றாடம் வாசகர் கடிதங்களும் அவற்றிற்கான ஆசிரியர் பதில்களும் ஒவ்வொரு நாளும் பகிரப்படும்
  • S ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளம். உலக இலக்கிய அறிமுகம், சிறந்த படைப்புகளின் விமர்சனம் அருளும் தளம்.
  •  அ முத்துலிங்கம் ஈழத்து ஐயா முத்துலிங்கம் அவர்களின் இணையதளம் 
  • கனலி பல்வேறு படைப்பாளர்களின் படைப்புகள் பகிர படும் தளம்.
  • அருஞ்சொல் எழுத்தாளர்  சமஸ் அவர்களின் மின்னிதழ் 
  • தமிழினி ஆசிரியர் கோகுல் பிரசாத் அவர்களின் மின்னிதழ், சமீப காலங்களில் அதிக கவனத்தை ஈர்த்துவரும் தளம்.
                                                                                                                    - மனோ 

Comments

Post a Comment

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...