Skip to main content

Posts

Showing posts from March, 2025

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...

திருத்தொண்டத்தொகை - மழலை மொழியில்

          திருத்தொண்டத்தொகை திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியது.  7ம் திருமுறை, பாடல் எண்  7.039.  60 தனியடியார்களும் 9 தொகையடியார்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளனர். " தில்லை வாழ் அந்தணர் " என்று இறைவனே அடியெடுத்துக்கொடுத்த பெருமையுடையது. இதனை வழி நூலாக கொண்டு நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்ட திருவந்தாதியும், பின்னர் சேக்கிழாரின் பெரியபுராணமும் இயற்றப்பட்டது.           கடந்த பெருஞ்சிவனிரவன்று கோவை ஈஷா மையத்தின் கலை நிகழ்ச்சியில் மழலைகள் பாடிய திருத்தொண்டத்தொகை ஒரு பரவச உணர்வை கொடுத்தது. குழந்தைகளின் கள்ளமற்ற தன்மை, எப்போதும் கடவுளுக்கு பக்கத்தில் இருப்பது. ஓட்டைப்பற்களும் கேமரா அருகில் வரும்போது வெட்கத்தில் குறுஞ்சிரிப்பும் குழைவுமாக பாடிய குழந்தைகளை காண்பதே நாகலிங்க பூவை கையில் வைத்திருப்பது போன்றிருந்தது .            பிஞ்சுக்கரங்களை தட்டிக்கொண்டு திரு திருவென்று முழியுடன் வரும் மழலை சொல் குழலையும் யாழையும் விஞ்சி நிற்கும். பச்சை பட்டு பாவாடை உ...

சோழர் கால செப்பு படிமங்கள்

          சோழர் கால செப்பு படிமங்கள் மூலம் - I ஜோப் தாமஸ் தமிழில் தியோடர் பாஸ்கரன்.           ஆலயக்கலை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று. உலகின் மிக சிறந்த அருங்காட்சியகங்கள் பலவற்றிலும் நிச்சயம் ஒரு சோழர் கால ஆடல்வல்லானின் செப்பு சிற்பம் இடம்பெற்றிருக்கும். சோழர் காலத்தைய கலை படைப்பின் உச்சங்களுள் என்று போற்றப்படுவது நடராஜர் சிற்பம். செப்பில் செய்யப்பட்ட வார்ப்பு படிமங்கள் இன்றும் பல சிவாலயங்களில் உற்சவர் சிற்பமாக அமைந்துள்ளது.          ஒவ்வொரு செப்பு  படிமமும் முதலில் தேன் மெழுகில் செய்யப்பட்டு பின் அதை வண்டல் மண் கலந்த கலவையை கொண்டு மூடி அதை அனலிலிட்டு மெழுகை உருகவைத்து அந்த பகுதியில் ஐம்பொன்னாலான உலோக குழம்பை ஊற்ற மெழுகு இருந்த இடத்தை உலோகம் நிரப்பிக்கொள்ளும். உலர்ந்த பின் பூச்சை உடைத்து பின் சில நகாசு வேலைகள் செய்து கண் திறப்பர். இம்முறை Lost wax எனப்படுகிறது. பிரபந்த வகுப்பின் போது ஆண்டாள் பாசுரத்தில் வந்த ததைத்துக்கொள்ளுதல் என்ற வார்த்தை என்னை உருக்கி உன்னை ஊற்றுவ...