Skip to main content

சோழர் கால செப்பு படிமங்கள்

        சோழர் கால செப்பு படிமங்கள் மூலம் - I ஜோப் தாமஸ் தமிழில் தியோடர் பாஸ்கரன்.


        ஆலயக்கலை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று. உலகின் மிக சிறந்த அருங்காட்சியகங்கள் பலவற்றிலும் நிச்சயம் ஒரு சோழர் கால ஆடல்வல்லானின் செப்பு சிற்பம் இடம்பெற்றிருக்கும். சோழர் காலத்தைய கலை படைப்பின் உச்சங்களுள் என்று போற்றப்படுவது நடராஜர் சிற்பம். செப்பில் செய்யப்பட்ட வார்ப்பு படிமங்கள் இன்றும் பல சிவாலயங்களில் உற்சவர் சிற்பமாக அமைந்துள்ளது.

        ஒவ்வொரு செப்பு  படிமமும் முதலில் தேன் மெழுகில் செய்யப்பட்டு பின் அதை வண்டல் மண் கலந்த கலவையை கொண்டு மூடி அதை அனலிலிட்டு மெழுகை உருகவைத்து அந்த பகுதியில் ஐம்பொன்னாலான உலோக குழம்பை ஊற்ற மெழுகு இருந்த இடத்தை உலோகம் நிரப்பிக்கொள்ளும். உலர்ந்த பின் பூச்சை உடைத்து பின் சில நகாசு வேலைகள் செய்து கண் திறப்பர். இம்முறை Lost wax எனப்படுகிறது. பிரபந்த வகுப்பின் போது ஆண்டாள் பாசுரத்தில் வந்த ததைத்துக்கொள்ளுதல் என்ற வார்த்தை என்னை உருக்கி உன்னை ஊற்றுவது என்ற பொருளில் செப்பு படிமங்களை சொன்னார் ஆசிரியர்.

    

நடராஜர் சிற்பம், வாலீஸ்வரன் கோயில் - வாலிகண்டபுரம் 

        ஐ ஜாப் தாமஸ் அவர்களின் Thiruvenkaadu Bronzes என்ற நூலின் விரித்த தமிழ் வடிவம் சோழர் கால செப்பு படிமங்கள். திருவெண்காடின் சில தெய்வ செப்பு படிமங்கள், நாயன்மார்களின் படிமங்கள் அதன் அமைப்பு முறை (Iconography ) மற்றும் ஆடை அணிகலன்கள் குறித்து விவரித்துள்ளார். செப்பு படிம வார்ப்பு முறையையும், படிமங்களின் பாணியையும், இறுதியாக அவற்றின் இன்றைய நிலையையும் விவரித்துள்ளார்.

        திருவெண்காடின் செப்பு படிமங்களான ரிஷபவாகன தேவர், அர்த்தநாரீஸ்வரர், பைரவர், காளி, பிச்சாண்டவர், கல்யாண சுந்தரர் மற்றும் கண்ணப்பர் போன்ற நாயன்மார்களின் உருவங்களும் அதன் அமைப்பு முறையும் பேசப்பட்டுள்ளன. 

        செப்பு படிம வார்ப்பு முறைகள் என்ற இயலில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட செப்பு சிலையை கொண்டு இந்த நிலபரப்பில் 3000 ஆண்டுகளாக செப்பு சிற்ப பாரம்பரியம் உள்ளது என்று விளக்கப்பட்டுள்ளன. 

        சிற்பங்களின் தற்போதைய நிலை இயலில் இதுவரை அழிந்த அல்லது தொலைந்துபோன சிற்பங்களின் காரணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

        செப்பு சிற்பங்கள் மற்றும் அதன் வரலாற்றை அறிய விரும்பும் ஒருவருக்கு நல்லதொரு நுழைவாயிலான நூல்.

வெளி இணைப்புகள் 

  1. செப்பு சிலை ஆவணப்படம் 

Comments

  1. Well written mano

    ReplyDelete
  2. மிக அருமை! வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

தில்லை பெருங்கோயில் வரலாறு - நூல் குறிப்பு

          தில்லை பெருங்கோயில் வரலாறு - வெள்ளைவாரனர் எழுதிய தில்லை ஆடல்வல்லான் கோயில் குறித்த ஆய்வு நூல். 1987ல் நடைபெற்ற தில்லை கோயிலின் குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். சிற்றம்பலம், பொற்கூரை             சென்ற ஜனவரியில் ஆலயக்கலை நண்பர்களுடன் சென்ற தில்லை பயணத்தின்போது ஆசிரியர் ஜெயக்குமார் தில்லை பெருங்கோயிலை குறித்து அறிவதற்கு பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று தில்லை பெருங்கோயில் வரலாறு. இந்நூலில் தில்லையின் தொன்மம், பண்ணிசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, இசை, நாட்டியம் என்று பல கோணங்களில் தில்லையில் வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் வெள்ளைவாரனர் அவர்கள்.           தில்லை கோயில் உலகபுருடனின் இதயக்கமலமாக கருதப்படுவது. சைவத்தில் கோயில் என்ற சிறப்பு பெயர் தில்லையை குறிப்பது. திருமுறைகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவது, சைவ சித்தாந்தத்தின் படி ஈசன் ஐந்தொழில் நிகழ்த்துவது, ஆடல்கலைகள் செழித்து வளர்ந்தது என்று பல கோணங்களிலும் தில்லை மிகுந்த முக்கியத்துவம்...