Skip to main content

திருவாரூர் ஆழித்தேர் - குருகு கட்டுரை

குருகு 26வது இதழில் திருவாரூர் தேர் குறித்த எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது. 



திருவாரூர் ஆழித்தேர் தமிழகத்தின் நீண்ட திருவிழாக்களில் தலையாயது. வசந்த விழாவிற்கு முன்னும் பின்னுமாக 55 நாட்கள் நடைபெறும் நீண்ட பிரம்மோற்சவம். எழுத்து வடிவில் கிடைக்கும் ஆவணங்களாகவே தஞ்சை சரஸ்வதி மகால் நூலத்தில் உள்ள மோடி ஆவணங்களில் திருவாரூர் தேர் திருவிழா குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. தேவாசிரியன் மண்டப விதான ஓவியங்களிலும் திருவிழா ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. 

நண்பர்களுடன் சென்று வந்த அனுபவக் குறிப்புகளும் திருவிழா பத்ததி குறித்தும் தேருக்கு முதல் நாள் புறப்பாடு குறித்தும் ஆவணப் படுத்த முயற்சித்துள்ளேன். இவற்றை இன்னும் நீண்ட பதிவாக ஒவ்வொருநாளும் நடைபெறும் நிகழ்வுகளை புகைப்படங்களுடன் தொகுக்கும் திட்டமும் உள்ளது.

அரசன் என்ற தொல்படிமம் அதன் உட்சபட்ச சாதியத்தை எவ்வாறு அடைகிறது என்று புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். கட்டுரையை படித்து செழுமை செய்ய உதவிய நண்பர் லால்குடி தினேஷ் மற்றும் புதுவை தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு நன்றியும் அன்பும். 

இந்த இதழில் பண்டைய இசைக்கருவிகளை ஆவணப் படுத்தும் சரவண பிரபுவின் நேர்காணலும் திருமுதுகுன்றம் பழமலை நாதர் கோயிலின் தேர் சிற்பங்கள் குறித்த விரிவான ஆவணப் பதிவும் மற்றும் பல நண்பர்களின் பங்களிப்பும் உள்ளன. 

கட்டுரை சுட்டி - https://www.kurugu.in/2026/04/Tiruvarur-Aazhi-Ther-Manoj-Kumar.html

மனோ 

திருச்சி 

10 மே 2026

Comments

Popular posts from this blog

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...