Skip to main content

பூனாட்சி - வாசிப்பனுபவம்

 



பூனாட்சி அல்லது வெள்ளாட்டின் கதை. பெருமாள் முருகன் அவர்களின் நாவல் வாசிப்பனுபவம். 3 நாட்களுக்கு முன் மாலை ஏழு மணிக்கு மூட்டை முடிசைகளை கட்டி கிளம்ப எத்தனித்த நூலகரை காத்திருக்க வைத்துவிட்டு எடுத்து வந்து படிக்க தொடங்கி இன்று மாலை படித்து முடித்தேன். பூனாட்சி என்கிற வெள்ளாட்டுக்குட்டி தான் நாவலின் கதை நாயகி. பகாசுரன் கிழவனிடம் ஒரு ஈத்திற்கு ஏழு குட்டிகள் போடும் அதிசய வெள்ளாட்டுக்குட்டியை விட்டுச் செல்கிறான். கிழவனும் அவன் துணைவியும் எவ்வாறு அக்குட்டியை வளர்த்தெடுக்கின்றனர் என்ற கதையை நாவல் விவரிக்கிறது. 

நாவலின் தொடக்கத்திலன்றி எந்த பத்தியிலும் பூனாட்சியை ஆடு என்ற ஒரு வார்த்தையால் கூட குறிக்கவில்லை. தீப்பெட்டி குச்சிகள் போன்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் எனக்கு ஒரு செல்லப்பிராணி வளர்ப்பதென்பதே அடையமுடியா அனுபவம். அவ்வகையில் நாவல் இதுவரை நான் கண்டிராத ஒரு புத்தம் புதிய அனுபவத்தை கொடுத்தது. கட்டாந்தரை எங்கும் அலைந்து திரிந்து பூனாட்சி மேயும் காட்சி வர்ணனைகள் புதுப் புனல் போன்று மகிழ்வை தருகிறது.

பூனாட்சி, கட்டிக்கொடுத்துவிட்ட தன் மகளை தவிர வேறு எந்த உறவுகளும் இல்லாத கிழவன் கிழவிக்கு மேசாசுரன் கொடுத்த ஒரு மகளாகவே வளர்ந்து வருகிறாள். அவளை பருவம் எய்தும் வரை வளர்த்து சினையாகி மூன்று முறை குட்டிகளை ஈன்று வாழ்வை முடிக்கும் வரை ஒரு பெண் தன் வாழ்வில் அடையும் அத்தனை அனுபவங்களையும் பூனாட்சியும் அடைகிறாள். 

சாமானியனுக்கு எளிதில் பிடிபடாத பல நுணுக்கங்களை பூனாட்சியின் கண்கள் வழியாக கட்டியிருப்பதால் நாவல் புதியதொரு வாசிப்பை வழங்குகிறது. வாசிப்பின் தொடக்க காலத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பரிந்துரைக்கும் நாவல் பூனாட்சி அல்லது வெள்ளாட்டின் கதை.


Comments

  1. சூப்பர் தம்பி

    ReplyDelete
  2. சூப்பர் தம்பி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...