Skip to main content

Posts

திருச்சி புத்தகத் திருவிழா

மாலை ஆறுமணிக்கு S ரா சொற்பொழிவு என்ற அறிவிப்பை பார்த்து ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். அரை மணி நேரம் ஆகவேண்டிய பயணம் காவிரி பாலத்தின் குறுக்காக புதிய பாலம் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் மாற்று வழியில் ஒருமணி நேரம் பிடித்தது. முதல் முறையாக மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் பிரிட்டிஷ் காலத்திய ராணுவ மைதானத்தின் கல்வெட்டை கண்டேன்.  வெஸ்ட்ரீ பள்ளி மைதானத்தை நெருங்கும் போதே கலைநிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கும் புத்தக கடைகளுக்காக தனி அரங்குமாக இரண்டு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகள் அப்போது தான் தொடங்கியிருந்ததால் முதலில் புத்தகங்களை பார்த்துவிட்டு பிறகு சொற்பொழிவு அரங்கத்திற்கு செல்லலாம் என்று நுழைந்தேன். பொன்னியின் செல்வன் வாங்குவதற்காக புத்தக கண்காட்சிக்கு வரும் மரபார்ந்த நிகழ்விற்கு திருச்சியும் விதிவிலக்கல்ல என்பதாக எந்த அரங்கில் நுழைந்தாலும் "பொன்னியின் செல்வன் இருக்கா" என்ற குரலை கேட்க முடிந்தது. கடந்த எழுபது ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் நாவ...

ஆதி வெள்ளறை

            மூன்றாவது முறையாக அலாரத்தை அனைத்தபோது மணி 6 அடித்திருந்தது, இங்க் பில்லெரில் ஒவ்வொரு துளியாக உரிவது போல் நீளம் நீங்கி வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. சட்டென்று கிளம்பி பேருந்து நிறுத்தத்தில் ஒரு டீ குடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது  துறையூர் பேருந்து வந்ததும் 2 மூட்டைகளை ஏற்றுக்கொள்ள சொல்லி நடத்துனரிடம் பாட்டி சண்டை பிடித்துக் கொண்டிருந்தார். சுவாரசியமா நடந்து கொண்டிருந்த சண்டையை இடைமறித்து திருவெள்ளறை கோவில் போகுமா என்று கேட்டபோது "போகும் பின்னாடி ஏறுப்பா" என்றவர் கடைசி படியில் கால்வைத்தபோது என்ன நினைத்தாரோ தெரியவில்லை "கோவில் போகாது வளைவுல இருந்து நடந்து போங்க" என்றார் சரி என்று சொல்லி, ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டேன் நல்லவேளையாக பேருந்தில் ஒலிபெருக்கி ஒன்றுமில்லை. காலை அமைதியை குலைக்காமல் ஊர்ந்து சென்றது.           இருபுறமும் கரைதொட்டு ஓடும் கொள்ளிடத்தை பார்த்தபோது வாழ்நாள் முழுக்க வறுமையில் வாடிய ஒரு மனிதன் ஊருக்கெல்லாம் செல்வம் கொழித்து பெருகுவது போன்று கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தத...

நீரதிகாரம்

 நீரதிகாரம்            ஆனந்த விகடனில் வாரம் தோறும் எழுத்தாளர் அ வெண்ணிலா அவர்கள் நீரதிகாரம் என்னும் தொடரை எழுதிவருகிறார். முல்லை பெரியாறு அணையின் நெகிழ்ச்சியான  சரித்திரத்தை விவரிக்கும் தொடராக வெளிவருகிறது.            தாது வருடப் பஞ்சத்தில் (1870 களில்) தேசம் முழுதும் 2 கோடி மக்கள்  செத்து மடிந்தனர். மெட்ராஸ் ப்ரெசிடென்ஸியில் மட்டும் லட்சக் கணக்கில் மனிதப் பிணங்கள் குவித்துவைக்கப் பட்டன.குலக்கொடி வையை முழுதும் பொய்த்துப் பொய் தென் மாவட்ட மக்கள் மலையகத் தீவுகளுக்கு  கப்பலில் அடிமைகளாகவும் பஞ்சம் பிழைக்கவும் ஆயிரக் கணக்கில் தினந்தோறும் வெளியேறிக் கொண்டிருந்தனர்.            பஞ்சத்தில் இருந்து எஞ்சிய மக்களை காக்கும் பொருட்டு மேற்காக ஓடும் பேரியாற்றை மதுரைக்கு திருப்ப அணை கட்டப் படுகிறது. ஒரு அணைக்  கட்டுமானம் அதுவும் நூறாண்டுகளாக கிடப்பில் இருக்கும் திட்டம் தொடங்குவதற்கு முன்னும், தொடங்கியபிறகும் அதனை சார்ந்துள்ள அத்தனை ஜீவராசிகளையும் எவ்வகையில் தொட்டு செல்கிறது ...

நூறு நாற்காலிகள் - வாசிப்பனுபவம்

  புத்தகங்கள் தான் தனக்கான வாசகனை தீர்மானிக்கின்றன என்ற கூற்றில் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு. Youtubeல் பவா செல்லதுரை அவர்கள் இந்த கதை சொல்லிய காணொளியை பார்த்து புத்தகத்தை படித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே உறங்கினேன். மறுநாள் காலை நூலகத்திற்கு சென்ற போது தவழ்ந்து இப்புத்தகம் என்கைகளில் விழுந்தது. நூறு நாற்காலிகள் ஜெயமோகன் அவர்களின் அறம் என்கிற உண்மை மனிதர்களை பற்றிய சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை. நாயாடிக் குறவர்களில் ஒரு இளைஞன் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரத்தில் பணியமர்த்தப் படுகிறான். தான் வளர்ந்த வாழ்வியல் கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறான அதிகார வர்கத்தை அடைந்த அந்த இளைஞனின் வாழ்க்கை விவரிக்கும் கதை, நூறு நாற்காலிகள். என்னளவில் புத்தகம் என்பது இதுவரை நான் காணாத ஒரு வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும். அவ்வகையில் இப்புத்தகம் தலைசிறந்த ஒரு வாசிப்பனுபவத்தை கொடுத்தது. படித்து முடித்து இரண்டு மூன்று நாட்கள் இக்கதையின் பாதிப்பில் இருந்து மீளவியலாது உலுக்கி போட்டது. அதிகாரத்தின் அரியணையில் அமர்ந்த தர்மனை சாதிய ஒடுக்குமுறையின் தீக் கங்குகள் அவ்வப்போது தீண்டி...

ஒரு துளி இலக்கியம்

ஒரு துளி இலக்கியம் வாசிப்பு நேரம் - 4 நிமிடங்கள்              ஒவ்வொரு புலரியும் புதிய தன்னளவில் முழு வாழ்க்கை. நாளின் முதல் ஒரு மணி நேரம் தான் அந்நாளை முழுமையாக எவ்வாறு கடக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும் என்பர். முதல் ஒரு மணி நேரத்தை ஆக்கப் பூர்வமாக நேர்மறையான எண்ணங்களை கொண்டு நிரப்பிடுவது இன்றியமையாத ஒன்று.            நம்மில் பெரும்பாலானோர் அந்த முதல் ஒரு மணி நேரத்தை பெரும்பாலும் சமூக வலைதளத்தில் கழிக்கின்றோம். பற்குச்சியையும், செல்பசியையும் ஒரு சேர கையில் எடுக்கின்றோம். சமூக விலங்கான மனிதனுக்கும் உலகத்தோடு ஒன்றி இருக்க சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்று கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நாளில் முதல் வேலையான முகம் காட்ட தயங்கும் கோழையோடு சண்டையிடுதல் இருபத்தி நான்கு மணி நேரத்தை தீயிட்டு கொழுத்துவதற்கு சமம்.          சமூக வலைத்தளங்கள் வசை தலங்களாக பெருகி வருகின்றன. (வன்மமாருகளால் நிரம்பி வழிகின்றன). அவ்வாறு தொடங்கும் நாள் ஒருவகையான இறுக்கத்தை கொடுத்துவிடும்.   ...

விஷ்ணுபுரம் இலக்கிய கூட்ட அனுபவம்

 விஷ்ணுபுரம் விருது விழா பங்கேற்பனுபவம்            வருடம் தோறும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத இலக்கிய ஆளுமைகளுக்கு  சிறப்பு செய்யும் விதமாக நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழா இவ்வாண்டு டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெற்றது.            துவக்க நிலை இலக்கிய வாசகனாக முதல் முறை இவ்விழாவில் பங்கேற்ற அனுபவத்தை இங்கே பதிவு சேய்கிறேன். இதுவரை படித்த இன்னும் படிக்க விரும்புகிற அத்தனை ஆளுமைகளையும் சந்தித்து, உரையாடி, விவாதித்து, எழுத்தாளனை அறிந்துகொள்ளும் முயற்சியில் இன்னும் ஓர் அடி முன்வைக்க உதவும் பரந்துபட்ட வெளி தான் இவ்வகையான இலக்கிய கூட்டங்கள்.            அவ்வகையில் முதல் நாள் முழுவதும் எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள் நடைபெற்றன. நேரடியாக வாசகர்கள் தங்கள் வினாக்களை எழுத்தாளர்களிடம் கேட்கவும் அனுபவத்தை ஒரு துளி சுவைத்துப் பார்க்கவும் வழிவகை செய்தது.           பொதுவாக இலக்கிய விழாக்களுக்கு சென்றால் அங்கு நிறைய புதிய நண்பர்களை கண்டடைவோம். ஆனால் ...

குமரித் துறைவி

  சித்திரையோடு ஓட்டிப் பிறந்தது மதுரைக் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து நடை பெற்றுவரும் இந்த பெரு நிகழ்வின் தொடக்கத்தை விவரிக்கும் நூல். தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்திருக்க வேண்டிய, இன்னும் அறிந்திராத வரலாற்றை ஜெ அவரது இயல்பான மொழி நடையிலேயே விவரித்திருக்கிறார். டில்லி சுல்தானியர்கள் படையெடுப்பின் போது தமிழகத்தின் அனேக கோயில்களின் பொன்னும் மணியும் இறைவர் இறைவி விக்கிரகங்களும் போர்படையிடம் சிக்காதிருக்க மக்கள் அவற்றை வெகு தூரம் உள்ள பிற இடங்களில் மறைத்து அடை காத்து வந்தனர் . திருவரங்க பெருமாள் உற்சவர் சிலையும் இதைப் போல தெற்கே கொண்டு சென்ற வரலாற்று கதை உண்டு. அவ்வாறே மாமதுரை நகரின் அரசி அன்னை மீனாட்சி சிலையையும், சொக்கனின் சிலை பிரம்மாண்ட ஸ்வரூபம் ஆததால் ஒரு சிறு கல்லில் அவரை ஆவாகனம் செய்து அந்த கல்லையும் ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா  கோயிலில் மறைத்து வைத்து பூஜித்து வந்தனர், படைகள் முற்றிலும் வடக்கே திரும்பி கூடடைந்தது உறுதியான பின், பாண்டியர் ஆட்சி காலம் தொடங்கியதும் மக்கள் மீண்டும்  அம்மைய...

ராணி மங்கம்மாள் - நா பார்த்தசாரதி

        நா பார்த்தசாரதியின் சரித்திர நாவல்களுள் மிக முக்கியமான குறு நாவல் ராணி மங்கம்மாள். வடக்கில் ஜான்சி ராணி பிறப்பதற்கு மூந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு வீரப் பெண்மணி. நாயக்க வம்சத்து மன்னரான சொக்கநாத நாயக்கரின் ராணி மங்கம்மாளின் கணவர். சொக்கநாத நாயக்கர், திருமலை நாயக்கரின் பேரன்.     கணவன் சொக்கநாதன் இறப்பிற்கு பின் உடன் கட்டை ஏறாது தன் மகன் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கனை வளர்த்து ஆளாக்கி அரியணையில் அமர வைத்தார். (ராஜ மௌலி இவரது கதையை படித்திருக்க கூடும்). முது வீரப்ப நாயக்கரின் இறப்பிற்கு பின் அவரது மகன் குழந்தை விஜயரங்க சொக்கநாதன் பிறந்த உடன் அவனது தாய் தந்தை இருவரும் மறித்து விடவே குழந்தைக்கு மகுடம் சூற்றி ஏறத்தாழ 18 ஆண்டுகள் மங்கம்மாளே ஆண்டு வந்தார்.     புத்தகத்தின் சுவாரசிய தகவல்களுள் ஒன்று கன்னட அரசன் சிக்கதேவரயனின் மீது முத்து வீரப்பனின் படை எடுப்பு முயற்சி. தமிழகத்திற்கும் கன்னடதிற்குமான காவிரி விவகாரம் அறுநூறு- எழுநூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒன்று. சிக்கதேவராயர் காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்திற்...

மறைக்கப் பட்ட இந்தியா - S. Ramakrishnan

     வரலாற்றின் மீது எப்போதுமே எனக்கு தீராத ஆர்வம் உண்டு. நாளைய கேள்வியின் பதிலை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு நேற்று தான் வரலாறு. ஒருமுறை S.Ra அவர்கள் அமரிக்காவில் மிகத் தொன்மையான பொருள் என்றால் அதற்கு 500 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். அனால் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு மரக்காபடி பத்து தலைமுறையாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு பொருள் என்று கூறியுள்ளார். நாம் மட்டுமல்ல வரலாற்றில் எந்த தலைமுறையுமே தனது வரலாற்றின் மீது அதீத ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை.       பள்ளி நேரத்தில் படித்து மறந்து போன யுவன் சுவாங் அவர்களின் இந்தியப் பயணத்தில் தொடங்கி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் வரை கிட்ட தட்ட மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றை இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் எஸ்.ரா.       எஸ்.ரா வின் பெரும்பாலான புத்தகங்கள் சாமானியனுக்கானவை. எளிய நடையில் அதே நேரம் காலத்தை தாண்டி நிற்கும் ஒரு படைப்புலகம் எஸ்.ரா வுடையது.  புத்தகத்தில் உள்ள சில சுவாரசிய வரலாற்று குறிப்புகள்: உஷா மெத்தா என்ற பெண் 1942ம் ஆண்டே ரகசிய ரேடியோ ஒன்றை நடத்தி வந்து அதற்காக ஆங்கிலேய அரசால...

யானை டாக்டர் புத்தக விமர்சனம்

  ஒவ்வொரு புத்தகமும் ஒரு பயணம் என்பர். இன்று நாம் போகவிருக்கும் பயணம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் முதுமலை பகுதியின் டாப் ஸ்லிப்பில் உள்ள யானைகள் காப்பகத்திற்கு. சமகால கதை சொல்லிகளில் மிக முக்கியமான இடத்தில் உள்ள திரு பவா செல்லதுரை அவர்கள் தான் யானை டாக்டர் புத்தகத்தை   எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர்.                டாக்டர் K எனப்படும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை குறித்த ஒரு ஆவணப் படத்தை புனைவு கலந்து  எழுதியிருக்கிறார் ஜெயமோகன் அவர்கள். IFS முடித்த ஒரு அலுவலர் டாக்டர் கே அவர்களுக்கு ஒரு பத்ம ஸ்ரீ விருது வாங்கித்தர வேண்டும் என்று முனைந்து தன்னால் இயன்ற வரையில் முயன்று கொண்டிருக்கிறார். காட்டில் வளர்ந்து கட்டின் ஒவ்வொரு பாதையும் தன் நரம்பென கொண்ட டாக்டர் K வெறும் சுழல் குழலில் பெறப்படும் பட்டமும் பதக்கமும் இந்த அறிவொளி பொருந்திய குழந்தைகளின் அன்பிற்கு முன் தூசெனும் சமம் ஆகாது என்று அவரை உணரச் செய்கிறார் என்பதே கதை சுருக்கம். முன்பு ஒருமுறை தனக்கு சிகிச்சை செய்த ஓர் மனிதனின் வாசனயை நினைவிற்கொண்...